10TH - TAMIL - UNIT 1 - UNIT TEST - Q/A PDF

                                                                     பத்தாம் வகுப்பு

அலகுத்தேர்வு - 1

அக்டோபர், நவம்பர் -2021


பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக இதுவரை பல்வேறு பகுதிகளாகப் பயிற்சித்தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. மேலும் அலகுத் தேர்வுகள் நடத்தப்பட்டால் மாணவர்கள் பாடங்களைக் கற்பது எளிதாகவும் இருக்கும், பாடப்பகுதிகளைச் சிறுசிறு பகுதிகளாகப் பிரித்துப் பயிற்சி அளிக்க வசதியாகவும் இருக்கும். இதைக் கருத்திற்கொண்டு அலகுத்தேர்வு வினாத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்படவிருக்கின்றன. இயல் 1- ல் 50 மதிப்பெண்களுக்கான வினாத்தாள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. . PDF வடிவத்தில் கொடுத்தால் பதிவிறக்கம் செய்வதும் படியெடுப்பதும் எளிது என்பதால் PDF வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மிகுந்த பணிச்சுமைகளுக்கிடையே தயாரிக்கப் பட்டுள்ளதால் பதிவிறக்கம் செய்த வினாத்தாளை நண்பர்களுக்கு அனுப்பாமல் இந்த இணைப்பை  ( LINK ) அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன். 
நன்றி, வணக்கம்!

பத்தாம் வகுப்பு - தமிழ்

குறைக்கப்பட்ட பாடப்பகுதி
அலகுத்தேர்வு -1 -வினாத்தாள்

பத்தாம் வகுப்பு

அலகுத்தேர்வு -1                                       மதிப்பெண் : 50

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.              5 x 1 =5

1.. ‘மெத்த வணிகலன்’ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது----------------------------------.

அ) வணிக கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்

ஆ) பெரும் வணிகமும் பெரும் கலன்களும்

இ) ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்

ஈ) வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்

2 ) ‘காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்’, நிலத்துக்கு நல்ல உரங்கள்- இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது--

அ) இலையும் சருகும்  ஆ) தோகையும் சண்டும்

இ) தாளும் ஓலையும்    ஈ) சருகும் சண்டும்

3. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்---

அ) எந்+தமிழ்+நா                 ஆ) எந்த+தமிழ்+நா          

இ) எம்+தமிழ்+நா                  ஈ) எந்தம்+தமிழ்+நா

4. ‘கேட்டவர் மகிழப் பாடிய பாடல்’ -இத்தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே------------.

அ) பாடிய; கேட்டவர்      ஆ) பாடல்; பாடிய

இ) கேட்டவர் ; பாடிய      ஈ) பாடல்; கேட்டவர்

5. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை---------.

அ) குலை வகை    ஆ) மணி வகை

இ) கொழுந்து வகை        ஈ) இலை வகை

ஆ) குறுகிய விடையளிக்க                                                5 x 2=10

6. ‘வேங்கை’ என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

7. ‘உடுப்பதூஉம்  உண்பதூஉம் காணின் பிறர்மேல்

வடுக்காண் வற்றாகும் கீழ்- இக்குறளில் பயின்று வந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி அதன் இலக்கணம் தருக.

8. ‘மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே!

     முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! - இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள ஐம்பெருங் காப்பியங்களை எழுதுக.

9. மொழி எத்தனை வகைப்படும்? அவை யாவை?

10.வினையாலணையும் பெயர் என்றால் என்ன? சான்று தருக.

இ) ஐந்து வரிகளுக்கு மிகாமல் விடையளிக்க                        3 x 4= 1 2

11. புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது. இதுபோல் இளம்பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.

12. அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது - இவ்வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றுக.

13. தொழிற்பெயருக்கும் வினையாலணையும் பெயருக்கும் உள்ள      

       வேறுபாடுகள் யாவை?

ஈ) 20 வரிகளுக்கு மிகாமல் விடையளிக்க                                                 7 x 1 =7

மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக.

உ) ‘சான்றோர் வளர்த்த தமிழ்’          என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக                                                                                                                                         7 x 1 =7

எ) அன்னைமொழியே  எனதொ தொடங்கி மாண்புகழே வரையிலான பெருஞ்சித்திரனாரின் பாடலை எழுதுக.        5 x 1 =5

ஏ)கலைச்சொல்லுக்கான தமிழ்ச்சொல்லை எழுதுக           4 x 1 =4 அ) Discussion                     ஆ) Vowel     

இ) Monolingual       ஈ) Homograph           

To download, click here

Post a Comment

Previous Post Next Post