10TH - TAMIL - மொழிப்பயிற்சி - இயல் 2 - PDF


  பத்தாம் வகுப்பு

மொழிப்பயிற்சி - இயல்  2



        பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக இதுவரை பல்வேறு பகுதிகளாகப் பயிற்சித்தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. மேலும் அலகுத் தேர்வுகள் நடத்தப்பட்டால் மாணவர்கள் பாடங்களைக் கற்பது எளிதாகவும் இருக்கும், பாடப்பகுதிகளைச் சிறுசிறு பகுதிகளாகப் பிரித்துப் பயிற்சி அளிக்க வசதியாகவும் இருக்கும். இதைக் கருத்திற்கொண்டு மொழிப்பயிற்சிப் பகுதிக்கான வினாத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்படவிருக்கின்றன. இயல் 2- ல் உள்ள மொழிப்பயிற்சி கீழே கொடுக்கப் பட்டுள்ளது. PDF வடிவத்தில் கொடுத்தால் பதிவிறக்கம் செய்வதும் படியெடுப்பதும் எளிது என்பதால் PDF வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மிகுந்த பணிச்சுமைகளுக்கிடையே தயாரிக்கப் பட்டுள்ளதால் பதிவிறக்கம் செய்த வினாத்தாளை நண்பர்களுக்கு அனுப்பாமல் இந்த இணைப்பை  ( LINK ) அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன். 
நன்றி, வணக்கம்!

பத்தாம் வகுப்பு - தமிழ்

குறைக்கப்பட்ட பாடப்பகுதி
மொழிப்பயிற்சி - இயல் 2

தமிழில் மொழிபெயர்த்துத் தலைப்பிடுக.

               The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark. The milky clouds start their wandering. The colourful birds start twitting their morning melodies in percussion. The cute butterflies dance around the flowers. The flower’s fragrance fills the  breeze. The breeze gently blows everywhere and makes everything peasant.

                                             பொன்மயமான கதிரவன் அதிகாலையில் எழுந்து, தன் ஒளிக்கதிர்களைப் பரப்பி  இருளை அகற்றியது. பால்போன்ற மேகங்கள் நகரத் தொடங்கின. வண்ணமயமான பறவைகள் தங்கள் அதிகாலை மெல்லிசையை இசைத்தன. அழகான வண்ணத்துப்பூச்சிகள் பூக்களைச் சுற்றி நடனமாடுகின்றன. மலரின் நறுமணம் தென்றலை நிரப்பியது. தென்றல் எல்லா இடங்களிலும் மெதுவாக வீசி எல்லா --வற்றையும் இனிமையாக்கியது

சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க.

இன்சொல், எழுகதிர், கீரிபாம்பு, பூங்குழல் வந்தாள், மலை வாழ்வார், முத்துப்பல்

  • இன்சொல் – பண்புத்தொகை – இனிமையான சொல் கூறுதல                                                                                             நன்று
  • எழுகதிர்       --  வினைத்தொகை  --  கிழக்கில்  எழும்கதிர்  பார்
  • கீரிபாம்பு        -- உம்மைத்தொகை  --  கீரியும் பாம்பும் சண்டையிட்டன.
  • பூங்குழல் வந்தாள் -- அன்மொழித்தொகை --பூப்போன்ற குழல்                                                                                                                      உடைய  பெண் வந்தாள்.
  • மலைவாழ்வார்   -- ஏழாம் வேற்றுமைத்தொகை –முனிவர் மலைக்கண்                                                                                                               வாழ்வார்.
  • முத்துப்பல்   -- உவமைத்தொகை  --  எழிலுக்கு முத்துப் போன்ற பல். 

1.       




       1. மலர் உண்டு; பெயரும் உண்டு – இரண்டு தொடர்களையும் ஒரு தொடராக்குக.

        மலரும் அதற்குப் பெயரும் உண்டு.

      2.    அரும்பாகி மொட்டாகிப் பூவாகி…… என்பதை ஒத்து அமைந்துள்ள தொடரைக் கண்டறிக   

       மூங்கில் பூவில் காய் தோன்றிக் கனியாகி அதிலிருந்து ஒருவகை அரிசி தோன்றும்.

      3.  நீங்கள் அறிந்த இரு பூக்களின் பெயர்களையும் பயன்களையும் எழுதுக.

மல்லிகை – நறுமணப் பொருள் தயாரிக்க உதவுகிறது.

செம்பருத்தி  -  முடி வலர்ச்சிக்கு உதவுகிறது

      4.   அரிய மலர் – இலக்கணக் குறிப்புத் தருக.

     அரிய – குறிப்புப் பெயரெச்சம்.

 5.தொடரில் பொருந்தாப் பொருள்தரும் மயங்கொலி எழுத்துகளைத் திருத்துக.

இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மறத்தின் மீதேறி அவற்றைப் பரித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மனத்தை ஏற்றும்.

இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மத்தை ஏற்றும்.

பாரதியின் வசனநடை – சிட்டுக்குருவி



மயில்

உறுதிமிக்க மூக்கு; விதையொத்த கண்கள்; சின்னத்தலை; கரும்பச்சை மற்றும் கருநீல நிறமுடைய பட்டுப்போர்த்த வயிறு; சாம்பல் மற்றும் செந்நிறம் கலந்த முதுகு; நீண்ட அழகிய பல வண்ணத்தாலான தோகை; பனங் கிழங்கையொத்த கால்கள்; இத்தனியும் சேர்த்து ஒருவர் கையிலே பிடிப்பது மிகவும் அரிது. இவ்விதமான உடலைச் சுமந்து கொண்டு என் வீட்டுத் தோட்டத்திற்கு இரண்டு உயிர்கள் வந்துபோகின்றன. அவற்றில் ஒன்று ஆண் மயில் மற்றொண்று பெண் மயில் .

சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க.

      1. முதல் இரன்டை நீக்கினாலும் வாசனை தரும்; நீக்காவிட்டாலும் வாசனை தரும்.  – நறுமணம்

          2.  பழமைக்கு எதிரானது – எழுதுகோலில் பயன்படும்  - புதுமை

          3.இருக்கும்போது உருவமில்லை- இல்லாமல் உயிரினம் இல்லை – காற்று

          4. நாலெழுத்தில் கண்சிமிட்டும் – கடையிரண்டில் நீந்தும் – விண்மீன்

          5.ஓரரெழுத்தில் சோலை – இரண்டெழுத்தில் வனம் – காடு.


கலைச்சொல் அறிவோம் :

1.      Storm    -  புயல்                                             2. Tornado  -  சூறாவளி

3.     Tempest  -  பெருங்காற்று                    4.  Land breeze  -  நிலக்காற்று

5.      Sea breeze  -  கடல் காற்று                    6.   Whirlwind  -  சுழல்காற்று

                                

                                                                                                        To download click here


Post a Comment

Previous Post Next Post