பத்தாம் வகுப்பு
மொழிப்பயிற்சி - இயல் 3
பத்தாம் வகுப்பு - தமிழ்
பத்தாம் வகுப்பு
மொழிப்பயிற்சி – இயல் 3
மொழிபெயர்க்க
:
Respected ladies
and gentlemen, I am langovan studying tenth standard. I have come here
to say a few words about our Tamil culture. Sangam literature shows that Tamils
were best in culture and civilization about two thousand years ago. Tamils who
have defined grammar for language have also defined grammar for life. Tamil
culture is rooted in the life styles of Tamils throughout India, Srilanka,
Malaysia, Singapore, England and worldwide. Though our culture is very old, it
has been updated consistently. We should feel proud about our culture. Thank
you one and all.
பெரியோர்களே
தாய்மார்களே வணக்கம். நான் இளங்கோவன், பத்தாம் வகுப்புப் படிக்கிறேன். நமது தமிழ்ப்
பண்பாடு பற்றிப் பேசுவதற்காக நான் இங்கு வந்துள்ளேன். தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே பண்பாட்டிலும் நாகரிகத்திலும் சிறந்து விளங்கியதாகச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.
மொழிக்கு இலக்கணம் வகுத்ததுபோலவே வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தனர் தமிழர். இந்தியா,
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள்
அனைவரது வாழ்க்கையிலும் தமிழர் பண்பாடு வேரூன்றியுள்ளது.
நம்முடைய பண்பாடு மிகத் தொன்மையானதாக இருந்தாலும், தொடர்ந்து தன்னை மேம்படுத்திக் கொண்டே
இருக்கிறது. நம்முடைய பண்பாட்டைப் பற்றி நாம்
பெருமை கொள்ள வேண்டும். அனைவருக்கும் நன்றி!
பழமொழிகளை
நிறைவு செய்க.
1. உப்பில்லாப் பண்டம்
குப்பையிலே
2.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
3.
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
4. விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு.
5. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு.
நெல்லை அவித்துக் காயவைத்து, எடுக்கும்
புழுங்கல் அரிசியைச் சோறாக்கி, அதனை இரவெல்லாம் நீரில் ஊறவைத்து, கிடைக்கும் பழைய சோற்றுடன்
சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், வடுமாங்காய், உப்பு நாரத்தாங்காய் மற்றும் சுண்ட வைத்த
குழம்பு இவற்றில் ஒன்றைக் கூட்டாக வைத்துச்
சாப்பிடுவது கிராமத்து உன்னதம்.
கதையாக்குக
.
மனித வாழ்வில் ஒவ்வொருவரும் நாளும்
புதுப்புது மனிதர்களைப் பார்க்கிறோம். புதுப்புதுச் செய்திகள் கிட்டும்! கிட்டுகிற
கருப்பொருள்களைத் திரட்டி, கற்பனை நயம் கூட்டிக் கதையாக்குவது ஒரு கலை. அது சிறுகதையாக
இருக்கலாம். புதினமாக இருக்கலாம். அன்பை எதிர்பார்த்திருப்பராக, யாருமற்றவராக..........
இருக்கும் ஒருவர் உங்களின் உதவியால் மனம் மகிழ்ந்த நிகழ்வினைக் கதையாக்குக.
பள்ளிக்குச்
சென்று கொண்டிருந்தேன். வயதான ஒருவர் தள்ளாடி வந்து கொண்டிருந்தார். பார்த்தாலே அவர்
பல நாள்களாகச் சாப்பிடவில்லை என்பது நன்றாகத் தெரிந்தது. அடுத்த அடி எடுத்து வைக்க
முடியாமல் கீழே விழப் போனார். நான் ஊடிச் சென்று அவரைப் பிடித்துக்கொண்டேன். அவரிய
அங்கிருந்த மரத்தடியில் அமர வைத்து, என்னுடைய மதிய உணவை அவருக்குச் சாப்பிடக் கொடுத்தேன்.
போன உயிர் திரும்பி வந்தது போல இருந்தது அவருக்கு. காவல்துறைக்குத் தெரிவித்து உதவியற்றோர்
காப்பகத்தில் அவரைச் சேர்க்க உதவினேன். கண்ணீரோடு நன்றி சொன்னார். நான் மகிழ்ச்சியோடு பள்ளிகுச் சென்றேன்.
நயம்
பாராட்டுக.
“கத்துகடல்
சூழ்நாகைக் காத்தாந்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும்
போது அரிசிவரும் – குத்தி
உலையிலிட
ஊரடங்கும் ஓர்அகப்பை அன்னம்
இலையிலிட
வெள்ளி எழும்.”
மோனை நயம் :
அத்தமிக்கும்
– அரிசி - அகப்பை-
அன்னம்
எதுகை நயம் :
கத்துகடல் – அத்தமிக்கும் ; உலையிலிட
- இலையிலிட
அணி நயம் :
இதில் இயல்பு நவிற்சி அணி வந்துள்ளது
விடுபட்ட
எழுத்துகளை நிரப்பி அந்த எழுத்துகளை மட்டும் இணைத்து ஒளிந்துள்ள ஒரு நூலின் பெயரைக் கண்டுபிடிக்க.
இறகு
(பறவையிடம் இருப்பது )
குருதி
(சிவப்பு நிறத்தில் இருக்கும் )
வாள்
(மன்னரிடம் இருப்பது )
அக்கா
(தங்கைக்கு மூத்தவள் )
மதி
( அறிவின் மறுபெயர் )
படகு
( நீரில் செல்வது)
இரு
சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
சிலை
– சீலை = சிலையை சீலையால் மூடினான்.
தொடு
–தோடு
= நீ தொடுவது என் தோடு.
மடு
- மாடு = மடுவில் மாடு மேய்ந்தது.
மலை-
மாலை =
மாலையில் மலை ஏறினான்.
வளி
– வாளி =
வளி சுழன்றடித்ததால் வாளி பறந்தது.
விடு
– வீடு =
வீட்டில் விடுவேன் வா.
நம்முடைய பாரம்பரிய
உணவு முறைகளைப் பின்பற்றினால் மட்டுமே நமது
உடல் நலம் பாதுகாக்கப்படும். பாரம்பரிய உணவுமுறைகளை மறந்ததால், குழந்தைகள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
பல்வேறு நோய்கள் மருத்துவர் சிவராமனுடைய கருத்தினை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
கலைச்சொல்
அறிவோம் :
1.
Classical literature - செவ்விலக்கியம்
2.
Epic literature - காப்பிய இலக்கியம்
3.
Devotional literature - பக்தி இலக்கியம்
4.
Ancient literature -
பண்டைய இலக்கியம்
5.
Regional literature - வட்டார
இலக்கியம்
6.
Folk literature -
நாட்டுப்புற இலக்கியம்
7.
Modern literature - நவீன இலக்கியம்