10TH - TAMIL - மொழிப்பயிற்சி - UNIT 1 PDF

                                                                     பத்தாம் வகுப்பு

மொழிப்பயிற்சி - அலகு  1



பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக இதுவரை பல்வேறு பகுதிகளாகப் பயிற்சித்தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. மேலும் அலகுத் தேர்வுகள் நடத்தப்பட்டால் மாணவர்கள் பாடங்களைக் கற்பது எளிதாகவும் இருக்கும், பாடப்பகுதிகளைச் சிறுசிறு பகுதிகளாகப் பிரித்துப் பயிற்சி அளிக்க வசதியாகவும் இருக்கும். இதைக் கருத்திற்கொண்டு மொழிப்பயிற்சிப் பகுதிக்கான வினாத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்படவிருக்கின்றன. இயல் 1- ல் உள்ள மொழிப்பயிற்சி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. PDF வடிவத்தில் கொடுத்தால் பதிவிறக்கம் செய்வதும் படியெடுப்பதும் எளிது என்பதால் PDF வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மிகுந்த பணிச்சுமைகளுக்கிடையே தயாரிக்கப் பட்டுள்ளதால் பதிவிறக்கம் செய்த வினாத்தாளை நண்பர்களுக்கு அனுப்பாமல் இந்த இணைப்பை  ( LINK ) அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன். 
நன்றி, வணக்கம்!

பத்தாம் வகுப்பு - தமிழ்

குறைக்கப்பட்ட பாடப்பகுதி
மொழிப்பயிற்சி - அலகு  1

பத்தாம் வகுப்பு

மொழிப்பயிற்சிகள்

 இயல் 1

மொழிபெயர்ப்பு :

1.       If you talk to a man in a language he understands, that goes to his head. If you talk to him in his own language that goes to his heart – Nelson Mandela.

நீங்கள் ஒருவரோடு ஏதோ ஒருமொழியில் பேசினால் அதை அவர் புரிந்துகொள்கிறார். அது அவரது தலைக்குள் செல்கிறது. நீங்கள் அவருடய தாய்மொழியில் பேசினாலோ அது அவருடைய  இதயத்திற்குள் செல்கிறது – நெல்சன் மண்டேலா.

2.      Language is the road map of a culture. It tells you where its people come from and where they are going. – Rita mae Brown.

மொழி என்பது ஒரு நாகரிகத்தின் வழித்தட வரைபடம். அது, அம்மக்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதையும் எங்கு சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நமக்குச் சொல்கிறது – ரீட்டா மே பிரௌன்.

சந்தக் கவிதையில் வந்த பிழைகளைத் திருத்துக.

“தேணிலே ஊரிய செந்தமிழின் – சுவை                                                 

                    தேரும் சிலப்பதி காறமதை                                                          

ஊனிலே எம்முயிர் உல்லலவும் – நிதம்                                                                      

ஓதி யுனர்ந்தின் புருவோமே”

 

“தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை                                                

                    தேறும் சிலப்பதி காமதை                                                           

ஊனிலே எம்முயிர் உள்ளளவும் – நிதம்                                                                    

ஓதி யுர்ந்தின் புறுவோமே”

கீழ்க்காணும்  சொற்களின் கூட்டப்பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக.

( குவியல், குலை, மந்தை, கட்டு )

சொல்

கூட்டப்பெயர்

சொல்

கூட்டப்பெயர்

கல்

குவியல்

புல்

கட்டு

பழம்

குலை

ஆடு

மந்தை


வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக.

1.       கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறார். அவரை அழைத்து வாருங்கள்.

கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறவரை அழைத்து வாருங்கள்.

2.      ஊட்டமிகு உணவு உண்டார். அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

ஊட்டமிகு உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

3.      நேற்று என்னைச் சந்தித்தார். அவர் என் நண்பர்.

நேற்று என்னைச் சந்தித்தவர் என் நண்பர்.

4.      பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தார். போட்டித் தேர்வில் வென்றார்.

பொது அறிவு நூல்களியத் தேடிப் படித்தவர் போட்டித் தேர்வில் வென்றார்.

தொடர்களில் உள்ள வண்ணச் சொற்களுக்குப் பதிலாக அதே பொருளுடைய வேறு சொற்களைப் பயன்படுத்தித் தொடர்களை மீள எழுதுக.

1.       உலகில் வாழும் மக்களில் சிலர் கனியிருக்கக் காய் புசித்தலைப்போல, இன்சொல் இருக்க வன்சொல் பேசி இன்னற்படுகின்றனர்.

வையத்தில் வாழும் மாந்தரில் சிலர் பழம் இருக்கக் காய்  உண்பதைப் போல, இன்சொல் இருக்க வன்சொல் பேசி, துன்பப்படுகின்றனர்.

2.          வள்ளல் குமணன் வறுமையால் வாடிவந்த புலவனுக்குத் தனது தலையைக் கொடுத்து மங்காப் புகழ் பெற்றான்.

வள்ளல் குமணன் ஏழ்மையால் வாடிவந்த கவிஞனுக்குத் தனது தலையைத் தந்து மங்காப் பெருமை பெற்றான்.

3.      நளனும் அவனது துணைவியும் நிடத நாட்டுக்கு வந்ததைக் கண்டு, அந்நாட்டு மக்கள் மழைமுகில் கண்ட மஞ்ஞை போலக் களி கொண்டனர்.

நளனும் அவன் மனைவியும் நிடத நாட்டுக்கு வந்ததைக் கண்டு அந்நாட்டு மக்கள் மழைமேகம் கண்ட மயில் போல மகிழ்ச்சி கொண்டனர்.

4.         சோலையிற் பூத்த மணமலர்களில் சுரும்புகள் மொய்த்துப் பண்பாடி மதுவுண்டன.

தோட்டத்தில் பூத்த மணமலர்களில் வண்டுகள் மொய்த்துப் பண்பாடி தேன் உண்டன.

5.          பசுப்போல் சாந்தமும் புலிபோல் தீரமும் யானை போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும்.

வைப்போல் சாந்தமும் வேங்கைபோல் வீரமும் களிறு போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும்

சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.

தேன், விளக்கு, மழை, விண், மணி, விலங்கு, செய், மேகலை, வான், பொன், பூ

விடை : பூந்தேன், பொன்விலங்கு, விண்மழை, மணிமேகலை, பொன்செய், வான்மழை

குறிப்புகளைக் கொண்டு வினாவிலேயே  விடை இருப்பது போன்று வினாத்தொடர்கள் அமைக்க.

குறளின்பம், சுவைக்காத இளநீர், காப்பியச் சுவை, மனிதகுல மேன்மை, விடுமுறைநாள்

·        குறளின்பத்தில் திளைக்காதவர் உண்டோ?

·        நான் சுவைக்காத இளநீர் உண்டோ?

·        சிலம்பின் காப்பியச் சுவையை அறியாதவர் உளரோ?

·        மனிதகுல மேன்மையைக் கருதாமல் இருக்கலாமா?

·        விடுமுறை நாளில் மகிழாதவர் உண்டோ?

எண்ணுப்பெயர்களைக் கண்டு, தமிழ் எண்களில் எழுதுக

செய்யுள் அடி

எண்ணுப்பெயர்

தமிழ் எண்

நாற்றிசையும் செல்லாத நாடில்லை

நான்கு

எறும்புந்தன் கையால் எண்சாண்

எண்

ஐந்துசால்பு ஊன்றிய தூண்

ஐந்து

ரு

நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி

நான்கு, இரண்டு

௪,

விடையளிக்க.

இன்சொல் வழி

தீயசொல் வழி

பிறர் மனம் மகிழும்

பிறர் மனம் வாடும்

அறம் வளரும்

அறம் தேயும்

புகழ் பெருகும்

இகழ் பெருகும்

நல்ல நண்பர்கள் சேருவர்

நல்ல நண்பர்கள் விலகுவர்

அன்பு நிறையும்

பகைமை நிறையும்.

இதில் நீங்கள் செல்லும் வழி யாது? உங்கள் நண்பருக்குக் காட்டும் வழி யாது ?

·        நான் இன்சொல் வழியில்தான் செல்வேன்.

·        என் நண்பனுக்கும் இன்சொல் வழியைத் தான் காட்டுவேன்.

கலைச்சொல் அறிவோம்.

·        Vowel                        -  உயிரெழுத்து

·        Consonant             -  மெய்யெழுத்து

·        Homogaraph       -  ஒப்பெழுத்து

·        Monolingual        -  ஒரு மொழி

·        Conversation       -   உரையாடல்

·        Discussion              -  கலந்துரையாடல்

                                                                                                        To download, click here

Post a Comment

Previous Post Next Post