9TH - TAMIL - SIRU VINA - ALL UNITS - PDF

                                                                 ஒன்பதாம் வகுப்பு 

  சிறு வினாக்கள்

 (அனைத்து இயல்களும்)
https://tamilrk-seed.blogspot.com

        அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கான பணித்தாள்கள் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்படுகின்றன. அந்த வகையில், குறைக்கப்பட்ட பாடப்பகுதிகளுக்குரிய சிறுவினாக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மெல்ல மலரும் மாணவர்களும் எளிதில் சிறுவினாக்களைப் படிக்க வேண்டும் என்ற நோக்கில் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. மீத்திறன் மாணவர்களுக்குத் தேவைப்படும் அளவுக்கு விரிவாக்கிக் கொள்ளலாம். எனவே ஆசிரியர்கள் கீழ்க்கண்ட இணைப்பிலிருந்து சிறுவினா பகுதிக்கான பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்து, மாணவர்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

நன்றி, வணக்கம்!

ஒன்பதாம் வகுப்பு 

சிறுவினாக்கள் 

ஒன்பதாம் வகுப்பு - தமிழ்

சிறுவினா    

ஒன்பதாம் வகுப்பு

சிறுவினா

1. திராவிட மொழிகளின் பிரிவுகள் யாவை ? அவற்றுள் உங்களுக்குத் தெரிந்த மொழிகளின் சிறப்பியல்புகளை விளக்குக

·              திராவிட மொழிக்குடும்பம், மொழிகள் பரவிய நில அடிப்படையில் தென் திராவிட மொழிகள், நடுத்திராவிட மொழிகள், வடதிராவிட  மொழிகள் என மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

·              என்னுடைய மொழி தமிழ்.

·              தமிழ் மிகவும் தொன்மையானது, இளமையானது, சொல்வளமிக்கது, பொருள் வளமிக்கது, இலக்கண, இலக்கிய வளமிக்கது.

2. மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம்பெற்றுள்ளது?

·              மூன்று                       -  தமிழ்

·              மூணு                          - மலையாளம்

·              மூடு                             -  தெலுங்கு

·              மூரு                             -  கன்னடம்

·              மூஜி                             -  துளு

3. தமிழ்மொழி காலந்தோறும் தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது?

                தமிழ்மொழி மூலத்திராவிட மொழியின் பண்புகள் பலவற்றையும் பேணிப்பாதுகாத்து வருகிறது. அத்துடன் தனித்தன்மை மாறுபடாமல் காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு,  புதிதாக உருவாகும் ஒவ்வொரு சொல்லுக்கும் துறைக்கும் ஏற்பப் புதுச்சொற்களை உருவாக்கிக்கொள்கிறது

4. தன்வினை, பிறவினை - எடுத்துக்காட்டுகளுடன் வேறுபடுத்திக் காட்டுக.

 

தன்வினை

பிறவினை

எழுவாய் ஒரு வினையைச் செய்வது

எழுவாய் ஒரு வினையைச் செய்ய வைப்பது

சான்று : அவன் திருந்தினான்

சான்று : அவன் திருந்தச் செய்தான்.

5. ‘புதுக்கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்’  -- உங்கள் பங்கினைக் குறிப்பிடுக

·        தமிழைப் பிழையின்றிப் பேசவும் எழுதவும் செய்வேன்.

·        முடிந்தவரை பிறமொழிச் சொற்கள் கலவாது பேசுவேன்.

·        இலக்கியங்கள் படைக்க முயல்வேன்.

·        பிறமொழி நூல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பேன்.

6. நிலைத்த புகழைப் பெறுவதற்குக் குடப்புலவியனார் கூறும் வழிகள் யாவை ?

               நிலம் குழிந்த இடமெங்கும் நீர்நிலைகளைப் பெருகச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்பவர் மூவகை இன்பத்தையும் நிலைத்த புகழையும் பெறுவர்.

7. அடுத்த தலைமுறைக்கும்  தண்ணீர் தேவை - அதற்கு நாம் செய்ய வேண்டியவற்றை எழுதுக.

·  மரங்களை நட்டு மழைவளம் பெருக்க வேண்டும்

·  மழைநீரைச் சேமிக்க வேண்டும்.

·  தண்ணீரைச் சிக்கனமாகச் செலவு செய்ய வேண்டும்.

·  நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும்.

8. வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாள நீட்சியை விளக்குக.

               ஏறுதழுவுதல் முல்லை நிலத்து மக்களின் அடையாளத்தோடும் மருத நிலத்து வேளாண் குடிகளின் தொழில் உற்பத்தியோடும் பாலை நிலத்து மக்களின் தேவைக்கான போக்குவரத்துத் தொழிலோடும் பிணைந்தது. இதுவே வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாளமாக நீட்சி அடைந்தது.  ஏரில் பூட்டி உழவு செய்ய உதவும் காளைகளியப் போற்றி மகிழும் பண்பாட்டு விழாவாக மாட்டுப் பொங்கல் உருவானது.

9. ஏறுதழுவுதல் திணைநிலை வாழ்வுடன் எவ்விதம் பிணைந்திருந்தது?

               ஏறுதழுவுதல் முல்லை நிலத்து மக்களின் அடையாளத்தோடும் மருத நிலத்து வேளாண் குடிகளின் தொழில் உற்பத்தியோடும் பாலை நிலத்து மக்களின் தேவைக்கான போக்குவரத்துத் தொழிலோடும் பிணைந்தது. இதுவே வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாளமாக நீட்சி அடைந்தது. இதன் தொடர்ச்சியாக, வேளாண் குடிகளின் வாழ்வோடும் உழைப்போடும் பிணைந்துகிடந்த மாடுகளுடன் அவர்கள் விளையாடி மகிழும் மரபாக உருக்கொண்டதே ஏறு தழுவுதலாகும்

10. வியத்தகு அறிவியல் விரவிக் கிடக்கும் நிலையில் அகழாய்வின் தேவை குறித்த உங்களது கருத்துகளைத் தொகுத்துரைக்க.

·        இன்றைய உலகம் அறிவியலில் முன்னேறிக் கொண்டிருக்கிறது.

·        ஆயினும் நாம் பழைமையை மறந்துவிடக் கூடாது.

·        முன்னோர்களின் பண்பாட்டையும் நாகரிகத்தையும் அறிந்துகொள்ளவும்

·        கடந்தகால வரலாற்றிலிருந்து தேவையான பாடங்களைக் கற்றுக்கொண்டு, எதிர்காலத்தைக் கட்டமைக்கவும்  அகழாய்வு நிச்சயம் தேவைப்படுகிறது.

11. மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதில் செயற்கைக்கோளின் பங்கு யாது?

·        இப்போது நாம் திறன்பேசிகளைப் பயன்படுத்துகிறோம்.

·        தானியக்கப் பண இயந்திரம், அட்டை பயன்படுத்தும் இயந்திரம் இதற்கெல்லாம் செயற்கைக்கோள் பயன்படுகிறது.

·        மக்கள் பயன்படுத்தும் அனைத்து இணையச் செயல்களுக்கும் செயற்கைக்கோள் பயன்படுகிறது.

12. வல்லினம் இட்டும் நீகியும் எழுதுவதன் இன்றியமையாமையை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

·        வல்லினம் இட்டும் நீக்கியும் எழுதுவது சொல்லின் பொருளையே மாற்றிவிடக் கூடும்.

·        சான்று : வேலை கொடுத்தான்         -  பணி கொடுத்தான் என்பது பொருள்

                       வேலைக் கொடுத்தான்  -   வேல் என்கிற ஆயுதத்தைக் கொடுத்தான் என்பது                                                                                                        பொருள்.

 13. சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் பெயர்களை எழுதுக.

·        ஔவையார், ஒக்கூர் மாசாத்தியார், வெண்ணிக் குயத்தியார், பொன்முடியார், நக்கன்னையார், காக்கைப்பாடினியார், வெள்ளிவீதியார், காவற்பெண்டு, நப்பசலையார் முதலியோர் சங்ககாலப் பெண்பாற்புலவர்களுள் சிலராவர்.

14. சமைப்பது தாழ்வா? இன்பம்

      சமைக்கின்றார் சமையல் செய்வார்.

அ) இன்பம் சமைப்பவர் யார்?      ஆ) பாவேந்தரின் கூற்றுப்படி சமைப்பது தாழ்வா?

·        சமையல் செய்பவர் இன்பம் சமைப்பவர் ஆவார்.

·        பாவேந்தரின் கூற்றுப்படி சமைப்பது தாழ்வன்று.

15. கைபிடி, கைப்பிடி - சொற்களின் பொருள் வேறுபாடுகளையும் அவற்றின் புணர்ச்சி வகைகளையும் எழுதுக

·        கைபிடி -  கையைப் பிடி      -  இயல்புப் புணர்ச்சி

·        கைப்பிடி              - கதவின் கைப்பிடி  - தோன்றல் விகாரப் புணர்ச்சி

16. இன்றைய பெண்கல்வி என்னும் தலைப்பில் வில்லுப்பாட்டு வடிவில் பாடல் எழுதுக

                பெண்கல்வி வரலாற்றில் பொற்காலம் என்றாலே

                எக்காலம்?  அது எக்காலம்.?

                அது இக்காலம்! ஆமா இக்காலம்!

                எல்லாத் துறைகளிலும் ஏற்றமாகப் பெண்கள்

                எழுந்துநிற்கும் பொற்காலம் அது எக்காலம்? - அது எக்காலம்?

                கப்பல் துறை முதலாய் கல்வித்துறை வரையில்

                பெண்கள் தலைநிமிர்ந்த இக்காலம்! ஆமா, இக்காலம்!

17. மருத்துவர் முத்துலட்சுமியின் சாதனைகளைக் குறிப்பிடுக.

·              இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்.

·              சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்.

·              சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி.

·              தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச்சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் ஆகியவை நிறைவேறக் காரணமாக இருந்தவர்.

·              1930 இல் அவ்விய இல்லம், 1952இல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்

18. நீலாம்பிகை அம்மையாரது தமிழ்ப்பணியின் சிறப்பைக் குறித்து எழுதுக

·              தனித்தமிழ்ப் பற்றுடையவர்.

·              இவரது தனித்தமிழ்க் கட்டுரை, வடசொல்-தமிழ் அகரவரிசை, முப்பெண்மணிகள் வரலாறு, பட்டினத்தார் பாராட்டிய மூவர் ஆகிய நூல்கள் தனித்தமிழில் எழுத விரும்புவோர்க்கு மிகவும் பயனுள்ளதாக விளங்குகின்றன.

19. இராவண காவியத்தில் இடம்பெற்ற இரண்டு உவமைகளை எடுத்துக்காட்டுக.

·              முல்லை நில மக்கள் முதிரை, சாமை, குதிரைவாலி, நெல் முதலியவற்றை அறுத்துக் கதிரடித்துக் களத்தில்  மலைபோல் குவித்து வைத்துள்ளனர்.

·              பாலைநிலத்திலுள்ள பாலக்காய் எருதின் கொம்புபோல் இருப்பதாக உவமிக்கிறார்.

20. ஆண்டாளின் கனவுக் காட்சிகளை எழுதுக.

·              ஆடும் பெண்கள், கைகளில் விளக்கையும் கலசத்தையும் ஏந்தியவாறு வந்து எதிர்கொண்டு அழைக்கிறார்கள். வடமதுரையை ஆளும் மன்னன் கண்ணன் பாதுகைகளை அணிந்துகொண்டு பூமி அதிர நடந்து வருமாறு கனவு கண்டேன்.

·        மத்தளம் முதலான இசைக்கருவிகள் முழங்குகின்றன. வரிகளையுடைய சங்குகளை நின்று ஊதுகின்றனர்.  மது என்ற அரக்கனை அழித்தவனான கண்ணன் முத்துகளையுடைய மாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தலின்கீழ், என்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கனவு கண்டேன்.

21. குறிஞ்சி நிலம் மணப்பதற்கான நிகழ்வுகளைக் குறிப்பிடுக.

·        தீயில் இட்ட சந்தனமரக் குச்சிகளின் நறுமணமும்

·        உலையிலிட்ட மலை நெல்லரிசிச் சோற்றின் நறுமணமும்

·        காந்தள் மலரின் ஆழ்ந்த மணமும்  எங்கும் பரவித் தோய்ந்து கிடப்பதால் குறிஞ்சி நிலம் மணக்கிறது.

                                                                                                                                    To download, click here





Post a Comment

Previous Post Next Post