8TH - TAMIL - எழுத்துகளின் பிறப்பு - பயிற்சித்தாள்

                                                                      எட்டாம் வகுப்பு

குறைக்கப்பட்ட பாடத்திட்டம் 
இயல் - 1
எழுத்துகளின் பிறப்பு
 பயிற்சித்தாள்

        அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் மாணவர்களுக்கும் வணக்கம்! கடந்த நவம்பர் 1 முதல் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்புவரை அனைத்து வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன. கொரோனா ஊரடங்கு காரணமாகப் பள்ளிக்கு வெகுநாள்களாக வராமல் இருந்த மாணவர்கள் தற்போது வரத் தொடங்கியுள்ளனர். கடந்த ஓராண்டாக வீடுகளில் அடங்கியிருந்த மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்புகளை ஈடுசெய்யும் பொருட்டு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் புத்தாக்கப்பயிற்சிக் கட்டகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம் கடந்த இரு மாதங்களாகப் புத்தாக்கப் பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கி வந்தோம். தற்போது சற்றேறக்குறைய அனைத்துப் பள்ளிகளிலும் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் மூலம் மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பது நிறைவடைந்துள்ளது. ஆகையால் பாடத்திட்டங்களை நோக்கி நாம் நகரத் தொடங்கியுள்ளோம். மாணவர்கள் வெகுநாள்களுக்குப் பிறகு பள்ளிக்கு வருவதால் பாடங்களில் ஆர்வம் இல்லாமல் இருக்கக்கூடும். அவர்களின் கவனத்தைக் கவரும் வகையில் பாடங்களை நாம் நடத்தினால் மட்டுமே கற்றல் விளைவுகளை நாம் அடைய முடியும். எனவே புதிய முறைகளிலும் தொழில்நுட்ப வளங்களைப் பயன்படுத்தியும் நாம் பாடங்களை நடத்த வேண்டும். அதேபோல், மதிப்பிடுதலிலும் நாம் பல்வேறு முறைகளைப் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மாணவர்கள் ஆர்வமுடன் அதில் பங்கேற்க மாட்டார்கள். இதனால் உண்மையாகவே நல்ல திறனுள்ள மாணவர்கூட குறைந்த மதிப்பெண்களைப் பெறக்கூடும். இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. காணொலிகளும்,   PPT  மற்றும் அந்தந்த பாடங்களுக்குரிய பயிற்சித்தாள்களும் கீழே உள்ள இணைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பதிவிறக்கம் செய்து கற்பித்தல் பணிகளுக்கும் மதிப்பீட்டுப் பணிகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அரசு உயர்நிலைப்பள்ளி

வகுப்பு :எட்டாம் வகுப்பு                           பாடத்தலைப்பு :எழுத்துகளின் பிறப்பு

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.                                                   6 X 1 = 6

1.இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் ---.

அ) இ,ஈ                   ஆ) உ,ஊ             இ) எ,ஏ                     ஈ) அ,ஆ

2. ஆய்த எழுத்து பிறக்கும் இடம் ---------.

அ) மார்பு                 ஆ) கழுத்து                             இ)தலை                ஈ)மூக்கு

3. வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம்--------------.

அ)தலை                                   ஆ) மார்பு                                    இ) மூக்கு              ஈ) கழுத்து

4. நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருத்துவதால் பிறக்கும் எழுத்துகள்

அ) க், ங்                   ஆ) ச், ஞ்                 இ) ப், ம் ஈ) ட், ண்

5. கீழ் இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து------------------------------.

அ) ம்                          ஆ) ப்                          இ) ய்                           இ) வ்

6. எழுத்துகளின் பிறப்புகளை----------வகையாகப் பிரிப்பர்.

அ) இரண்டு       ஆ) ஐந்து               இ) மூன்று                               ஈ) நான்கு

 

ஆ) குறுகிய விடையளி                                                                                  2 X 2 = 4

7. உயிரெழுத்துகள் எதனை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?

 

 

8. எழுத்துகளின் பிறப்பை எத்தனை வகையாகப் பிரிப்பர்? அவை யாவை?

Post a Comment

Previous Post Next Post