எட்டாம் வகுப்பு
அரசு உயர்நிலைப்பள்ளி,
அரங்கனூர்
பணித்தாள் - 4
வகுப்பு : எட்டாம் வகுப்பு பாடம் :தமிழ் பாடத்தலைப்பு
: ஓடை மதிப்பெண் : 10
அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 6 X 1 = 6
1. பள்ளிக்குச் சென்று கல்வி-----------------சிறப்பு.
அ) பயிலுதல் ஆ) பார்த்தல் இ) கேட்டல் ஈ) பாடுதல்
2. செஞ்சொல் மாதரின் வள்ளைப் பாட்டிற்கேற்ப
முழவை மீட்டுவது------------------
அ) கடல் ஆ)
ஓடை இ) குளம் ஈ) கிணறு
3. ‘நன்செய்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது--------------------------------.
அ) நன்று + செய் ஆ) நன்+ செய் இ) நன்மை + செய் ஈ) நல் + செய்
4. ‘நீளுழைப்பு’ என்ற சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது--------------------------------.
அ) நீளு + உழைப்பு ஆ) நீண் + உழைப்பு இ) நீ + உழைப்பு ஈ) நீள் + உழைப்பு
5. சீருக்கு + ஏற்ப என்ற சொல்லைச் சேர்த்து
எழுதக் கிடைப்பது--------------------------------.
அ) சீருக்குஏற்ப ஆ) சீருக்கேற்ப இ) சீர்க்கேற்ப ஈ) சீருகேற்ப
6. ‘ஓடை + ஆட’ என்ற சொல்லைச் சேர்த்து எழுதக்
கிடைப்பது--------------------------------.
அ) ஓடைஆட ஆ) ஓடையாட இ) ஓடையோட ஈ) ஓடைவாட
ஆ) குறுகிய விடையளி: 2 X 2 = 4
7. ஓடை எவ்வாறு ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார்?
8.. ஓடை எழுப்பும் ஒலிக்கு எதனை உவமையாக வாணிதாசன்
கூறுகிறார்?