எட்டாம் வகுப்பு
அரசு உயர்நிலைப்பள்ளி,
அரங்கனூர்
பணித்தாள் - 5
வகுப்பு : எட்டாம் வகுப்பு பாடம் :தமிழ் பாடத்தலைப்பு : வினைமுற்று மதிப்பெண் : 10
அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 6 X 1 = 6
1. மாடு வயலில் புல்லை மேய்ந்தது இத்தொடரில்
உள்ள வினைமுற்று----------.
அ) மாடு ஆ)
வயல் இ) புல் ஈ) மேய்ந்தது
2. பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று எது?
அ) படித்தான் ஆ) நடக்கின்றான் இ) ஓடாது ஈ) உண்பான்
3. ஒன்றன் செயலைக் குறிக்கும் சொல்-------------------------
அ) பெயர்ச்சொல் ஆ) வினைச்சொல் இ)
உரிச்சொல் ஈ) இடைச்சொல்
4. ஐம்பால், முக்காலம், மூவிடம் ஆகிய அனைத்திலும்
----------வரும்..
அ) பெயர்முற்றுகள் ஆ) இடைமுற்று இ)
வினைமுற்று ஈ) வினையெச்சம்
5. ஒரு செயலைச் செய்யுமாறு கட்டளையிடும் வினைமுற்று
--------------வினைமுற்று.
அ) ஏவல் ஆ)
குறிப்பு இ) வியங்கோள் ஈ) தெரிநிலை
6. வினைமுற்று -------------------வகைப்படும்.
அ) நான்கு ஆ) மூன்று இ)
ஐந்து ஈ) இரண்டு
ஆ) குறுகிய விடையளி 2 X 2 = 4
7. வினைமுற்று என்றால் என்ன?
8. வியங்கோள் வினைமுற்று விகுதிகள் யாவை?
- காணொலி
- பயிற்சித்தாள்
- PPT - 1 (வானவில் அவ்வையார் எழுத்துருவில் அமைந்தது. )
- வானவில் அவ்வையார் FONT