8 TH - திருக்குறள் - UNIT 2 - WORK SHEET , VIDEO

 எட்டாம் வகுப்பு

குறைக்கப்பட்ட பாடத்திட்டம் 
இயல் - 2
திருக்குறள்
 பயிற்சித்தாள்

        அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் மாணவர்களுக்கும் வணக்கம்! கடந்த நவம்பர் 1 முதல் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்புவரை அனைத்து வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன. கொரோனா ஊரடங்கு காரணமாகப் பள்ளிக்கு வெகுநாள்களாக வராமல் இருந்த மாணவர்கள் தற்போது வரத் தொடங்கியுள்ளனர். கடந்த ஓராண்டாக வீடுகளில் அடங்கியிருந்த மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்புகளை ஈடுசெய்யும் பொருட்டு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் புத்தாக்கப்பயிற்சிக் கட்டகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம் கடந்த இரு மாதங்களாகப் புத்தாக்கப் பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கி வந்தோம். தற்போது சற்றேறக்குறைய அனைத்துப் பள்ளிகளிலும் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் மூலம் மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பது நிறைவடைந்துள்ளது. ஆகையால் பாடத்திட்டங்களை நோக்கி நாம் நகரத் தொடங்கியுள்ளோம். மாணவர்கள் வெகுநாள்களுக்குப் பிறகு பள்ளிக்கு வருவதால் பாடங்களில் ஆர்வம் இல்லாமல் இருக்கக்கூடும். அவர்களின் கவனத்தைக் கவரும் வகையில் பாடங்களை நாம் நடத்தினால் மட்டுமே கற்றல் விளைவுகளை நாம் அடைய முடியும். எனவே புதிய முறைகளிலும் தொழில்நுட்ப வளங்களைப் பயன்படுத்தியும் நாம் பாடங்களை நடத்த வேண்டும். அதேபோல், மதிப்பிடுதலிலும் நாம் பல்வேறு முறைகளைப் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மாணவர்கள் ஆர்வமுடன் அதில் பங்கேற்க மாட்டார்கள். இதனால் உண்மையாகவே நல்ல திறனுள்ள மாணவர்கூட குறைந்த மதிப்பெண்களைப் பெறக்கூடும். இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. காணொலிகளும்,   PPT  மற்றும் அந்தந்த பாடங்களுக்குரிய பயிற்சித்தாள்களும் கீழே உள்ள இணைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பதிவிறக்கம் செய்து கற்பித்தல் பணிகளுக்கும் மதிப்பீட்டுப் பணிகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.



அரசு உயர்நிலைப்பள்ளி, அரங்கனூர்

பணித்தாள் - 6

வகுப்பு : எட்டாம் வகுப்பு                                          பாடம் :தமிழ் 

பாடத்தலைப்பு : திருக்குறள்                                      மதிப்பெண் : 10

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                                            6 X 1 = 6

1. புகழாலும் பழியாலும் அறியப்படுவது-------------------------------.

அ) அடக்கமுடைமை       ஆ) நாணுடைமை      இ) நடுவுநிலைமை        ஈ) பொருளுடைமை

2. பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள்------------------------------------.

அ) வலிமையற்றவர்          ஆ) கல்லாதவர்              இ) ஒழுக்கமற்றவர்         ஈ) அன்பில்லாதவர்

3. ‘வல்லுருவம்’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது-------------------------------.

அ) வல் + உருவம்      ஆ) வன்மை + உருவம்          இ) வல்ல + உருவம்         ஈ) வன் + உருவம்

4. ‘நெடுமை + தேர்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது----------------------------------.

அ) நெடுதேர்      ஆ) நெடுந்தேர்      இ) நெடுத்தேர்       ஈ) நெடுமைத்தேர்

5. ‘வருமுன்னர்’ எனத்தொடங்கும் குறளில்  உள்ள  அணி ------------------------------------------------

அ) உவமை அணி           ஆ) தற்குறிப்பேற்ற அணி            இ) உருவக அணி            ஈ)  தீவக அணி

6. திருக்குறளின் பெருமையை விளக்கும் நூல் -------------------------------------------------------.

அ) ஆத்திசூடி     ஆ) புறநானூறு       இ) கலித்தொகை           ஈ) திருவள்ளுவமாலை

 

ஆ) குறுகிய விடையளி                                                                              2 X 2 = 4

7. சான்றோர்க்கு அழகாவது எது?

 

 

 

8. பழியின்றி வாழும் வழியாகத் திருக்குறள் கூறுவது யாது?

 

 


Post a Comment

Previous Post Next Post