எட்டாம் வகுப்பு
அரசு உயர்நிலைப்பள்ளி,
அரங்கனூர்
பணித்தாள் - 6
வகுப்பு : எட்டாம் வகுப்பு பாடம் :தமிழ்
பாடத்தலைப்பு : திருக்குறள் மதிப்பெண் : 10
அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 6 X 1 = 6
1. புகழாலும் பழியாலும் அறியப்படுவது-------------------------------.
அ) அடக்கமுடைமை ஆ) நாணுடைமை இ) நடுவுநிலைமை ஈ) பொருளுடைமை
2. பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள்------------------------------------.
அ) வலிமையற்றவர் ஆ) கல்லாதவர் இ) ஒழுக்கமற்றவர் ஈ) அன்பில்லாதவர்
3. ‘வல்லுருவம்’ இச்சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது-------------------------------.
அ) வல் + உருவம் ஆ) வன்மை + உருவம் இ)
வல்ல + உருவம் ஈ) வன் + உருவம்
4. ‘நெடுமை + தேர்’ என்பதனைச் சேர்த்தெழுதக்
கிடைப்பது----------------------------------.
அ) நெடுதேர் ஆ) நெடுந்தேர் இ)
நெடுத்தேர் ஈ) நெடுமைத்தேர்
5. ‘வருமுன்னர்’ எனத்தொடங்கும் குறளில் உள்ள அணி
------------------------------------------------
அ) உவமை அணி ஆ) தற்குறிப்பேற்ற அணி இ)
உருவக அணி ஈ) தீவக அணி
6. திருக்குறளின் பெருமையை விளக்கும் நூல்
-------------------------------------------------------.
அ) ஆத்திசூடி ஆ) புறநானூறு இ) கலித்தொகை ஈ) திருவள்ளுவமாலை
ஆ) குறுகிய விடையளி 2 X 2 = 4
7. சான்றோர்க்கு அழகாவது எது?
8. பழியின்றி வாழும் வழியாகத் திருக்குறள்
கூறுவது யாது?