எட்டாம் வகுப்பு
அரசு
உயர்நிலைப்பள்ளி,
பணித்தாள்
– 2
வகுப்பு : எட்டாம் வகுப்பு தலைப்பு : தமிழ் வரிவடிவ வளர்ச்சி
பாடம் : தமிழ் மதிப்பெண்
: 10
அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 6 X 1 = 6
1. தமிழ் எழுத்துகள் தற்போதுள்ள நிலையான வடிவத்தைப்
பெறக் காரணமாக அமைந்தது -------
அ) ஓவியக்கலை ஆ) இசைக்கலை இ) அச்சுக்கலை ஈ) நுண்கலை
2. வளைந்த கோடுகளால் அமைந்த எழுத்துகள்
-----------------------------.
அ) கோட்டெழுத்து ஆ) வட்டெழுத்து இ) சித்திர எழுத்து ஈ) ஓவிய எழுத்து
3. தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தில் ஈடுபட்டவர்-----------------.
அ) பாரதிதாசன் ஆ) பெரியார் இ) வ.உ.சிதம்பரனார் ஈ) பெருஞ்சித்திரனார்
4. மனிதன் தன் கருத்தைப் பிறருக்கு அறிவிக்க
---------------------கண்டறிந்தான்.
அ) அறிவை ஆ) நட்பை இ) மொழியை ஈ) மாநிலத்தை
5. ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என்று உருவான நிலை
-----------------எனப்படும்.
அ) ஒளி எழுத்து ஆ) வடிவ எழுத்து இ) பேச்சு எழுத்து ஈ) ஒலி எழுத்து
6. கண்ணெழுத்துகள் பற்றிக் குறிப்பிடுவன-----------------------------.
அ) திருக்குறள் ஆ) மணிமேகலை இ) சீவக சிந்தாமணி ஈ) சிலப்பதிகாரம்.
ஆ) குறுகிய விடையளி 2 X 2 = 4
7. ஓவிய எழுத்து என்றால் என்ன?
8. வீரமாமுனிவர் மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தங்களுள்
எவையேனும் இரண்டனை எழுதுக.