8TH - TAMIL - தமிழ் வரிவடிவ வளர்ச்சி - காணொலி, PPT மற்றும் பயிற்சித்தாள்

 எட்டாம் வகுப்பு

குறைக்கப்பட்ட பாடத்திட்டம் 
இயல் - 1
தமிழ் வரிவடிவ வளர்ச்சி
காணொலி, PPT மற்றும் பயிற்சித்தாள்

        அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் மாணவர்களுக்கும் வணக்கம்! கடந்த நவம்பர் 1 முதல் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்புவரை அனைத்து வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன. கொரோனா ஊரடங்கு காரணமாகப் பள்ளிக்கு வெகுநாள்களாக வராமல் இருந்த மாணவர்கள் தற்போது வரத் தொடங்கியுள்ளனர். கடந்த ஓராண்டாக வீடுகளில் அடங்கியிருந்த மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்புகளை ஈடுசெய்யும் பொருட்டு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் புத்தாக்கப்பயிற்சிக் கட்டகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம் கடந்த இரு மாதங்களாகப் புத்தாக்கப் பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கி வந்தோம். தற்போது சற்றேறக்குறைய அனைத்துப் பள்ளிகளிலும் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் மூலம் மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பது நிறைவடைந்துள்ளது. ஆகையால் பாடத்திட்டங்களை நோக்கி நாம் நகரத் தொடங்கியுள்ளோம். மாணவர்கள் வெகுநாள்களுக்குப் பிறகு பள்ளிக்கு வருவதால் பாடங்களில் ஆர்வம் இல்லாமல் இருக்கக்கூடும். அவர்களின் கவனத்தைக் கவரும் வகையில் பாடங்களை நாம் நடத்தினால் மட்டுமே கற்றல் விளைவுகளை நாம் அடைய முடியும். எனவே புதிய முறைகளிலும் தொழில்நுட்ப வளங்களைப் பயன்படுத்தியும் நாம் பாடங்களை நடத்த வேண்டும். அதேபோல், மதிப்பிடுதலிலும் நாம் பல்வேறு முறைகளைப் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மாணவர்கள் ஆர்வமுடன் அதில் பங்கேற்க மாட்டார்கள். இதனால் உண்மையாகவே நல்ல திறனுள்ள மாணவர்கூட குறைந்த மதிப்பெண்களைப் பெறக்கூடும். இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. காணொலிகளும்,   PPT  மற்றும் அந்தந்த பாடங்களுக்குரிய பயிற்சித்தாள்களும் கீழே உள்ள இணைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பதிவிறக்கம் செய்து கற்பித்தல் பணிகளுக்கும் மதிப்பீட்டுப் பணிகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அரசு உயர்நிலைப்பள்ளி,

பணித்தாள் – 2

 

வகுப்பு : எட்டாம் வகுப்பு                                   தலைப்பு  : தமிழ் வரிவடிவ வளர்ச்சி

பாடம் : தமிழ்                                                       மதிப்பெண் : 10

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக                             6 X 1 = 6

1. தமிழ் எழுத்துகள் தற்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெறக் காரணமாக அமைந்தது -------

அ) ஓவியக்கலை        ஆ) இசைக்கலை       இ) அச்சுக்கலை         ஈ) நுண்கலை

2. வளைந்த கோடுகளால் அமைந்த எழுத்துகள் -----------------------------.

அ) கோட்டெழுத்து     ஆ) வட்டெழுத்து        இ) சித்திர எழுத்து       ஈ) ஓவிய எழுத்து

3. தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தில் ஈடுபட்டவர்-----------------.

அ) பாரதிதாசன்                  ஆ) பெரியார்    இ) வ.உ.சிதம்பரனார்                ஈ) பெருஞ்சித்திரனார்

4. மனிதன் தன் கருத்தைப் பிறருக்கு அறிவிக்க ---------------------கண்டறிந்தான்.

அ) அறிவை    ஆ) நட்பை      இ) மொழியை              ஈ) மாநிலத்தை

5. ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என்று உருவான நிலை -----------------எனப்படும்.

அ) ஒளி எழுத்து          ஆ) வடிவ எழுத்து       இ) பேச்சு எழுத்து        ஈ) ஒலி எழுத்து

6. கண்ணெழுத்துகள் பற்றிக் குறிப்பிடுவன-----------------------------.

அ) திருக்குறள்           ஆ) மணிமேகலை       இ) சீவக சிந்தாமணி    ஈ) சிலப்பதிகாரம்.

 

ஆ) குறுகிய விடையளி                                                                    2 X 2 = 4

7. ஓவிய எழுத்து என்றால் என்ன?

 

 

 

8. வீரமாமுனிவர் மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தங்களுள் எவையேனும் இரண்டனை எழுதுக.



Post a Comment

Previous Post Next Post