10TH- TAMIL - 2 MARKS- UNIT 4-6 PDF

பத்தாம் வகுப்பு

குறுவினாக்கள்

இயல் 4-6



பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக இதுவரை பல்வேறு பகுதிகளாகப் பயிற்சித்தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. மேலும் அலகுத் தேர்வுகள் நடத்தப்பட்டால் மாணவர்கள் பாடங்களைக் கற்பது எளிதாகவும் இருக்கும், பாடப்பகுதிகளைச் சிறுசிறு பகுதிகளாகப் பிரித்துப் பயிற்சி அளிக்க வசதியாகவும் இருக்கும். இதைக் கருத்திற்கொண்டு மொழிப்பயிற்சிப் பகுதிக்கான வினாத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. தற்போது  தேர்வுக்கு மாணவர்களை ஆயத்தம் செய்வது மிகுந்த அவசியமாகிறது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நிலை தொடராது என்றே அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பெரும்பாலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடைபெறும் என்றே தெரியவருகிறது. இதைக் கருத்திற்கொண்டு முதல் மூன்று இயல்களுக்கான குறுவினாக்கள் ஏற்கனவே கொடுக்கப்பட்டன.  இப்போது 4 முதல் 6  இயல்களுக்கான விடைகளுடன் கூடிய வினாத்தாள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை ஆசிரியர்களும் மானவர்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மிகுந்த பணிச்சுமைகளுக்கிடையே தயாரிக்கப் பட்டுள்ளதால் பதிவிறக்கம் செய்த வினாத்தாளை நண்பர்களுக்கு அனுப்பாமல் இந்த இணைப்பை  ( LINK ) அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.  

பத்தாம் வகுப்பு

                                                    தமிழ்                                                    

குறுவினா 4-6 இயல்கள்

1] மருத்துவத்தில்மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பங்கினை எழுதுக.

               மருத்துவர், தனக்கு ஏற்பட்ட புண்ணை, துன்பம் தரும்படி கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அத்துன்பம் தனக்கு நன்மையே என்று உணர்ந்து நோயாளி மருத்துவர் மீது அன்பு காட்டுவார்.

 

2] சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான்.புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான் என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார்- இதில் உள்ள திணை வழுவமைதிகளைத் திருத்தி எழுதுக.

சீசர் எப்போதும் என் சொல் பேச்சைக் கேட்கும்.புதியவர்களைப் பார்த்துத் குரைக்குமே தவிர கடிக்காது என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றி பெருமையாகக் கூறினார்.

3 ] செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத்

   தொடர்களாக்குக.

·       கற்போம் ! கற்போம் ! அருளைப் பெருக்கக் கற்போம் !

·       கற்போம்!  கற்போம் !  அறிவினைப் பெறக் கற்போம் !

4] அமர்ந்தான் பகுபத உறுப்பிலக்கணம் தருக.

       அமர்ந்தான் = அமர் + த் (ந்) + த்  + ஆன்

அமர்- பகுதி;      த் - சந்தி ;   ந் - விகாரம்     த் – இறந்தகால இடைநிலை      ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி

5] இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது?   இதோ…. இருக்கிறதே சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே? மின்சாரம் இருக்கிறதா?இல்லையா? மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்து எழுதுக.

·     மின் விளக்கின் சொடுக்கி  எந்தப்பக்கம் இருக்கிறது? அறியா வினா

·       இதோ இருக்கிறதே! -      சுட்டு விடை

·       சொடுக்கியைப் போட்டாலும்  வெளிச்சம் வரவில்லையே மின்சாரம் இருக்கிறதா?இல்லையா? 

·       ஐய வினா       

                                                         

6) “உறங்குகின்ற கும்பகன்ன” ‘எழுந்திராய் எழுந்திராய்’

               காலதூதர் கையிலே ‘உறங்குவாய் உறங்குவாய்” கும்பகன்னனை  என்ன சொல்லி எழுப்புகிறார்கள்?  

               எங்கு உறங்கச் சொல்லுகிறார்கள்?

எழுப்புதல்: கும்பகன்னனுடைய பொய்யான வாழ்வு எல்லாம் இன்றிலிருந்து இறங்குவதற்குத் தொடங்கி   விட்டது என்பதனைக் காண அவனை  எழுப்புகிறார்கள்.

உறங்கச் சொல்லுதல்: காற்றாடி போல எல்லா இடங்களில் திரிகின்ற வில்லைப் பிடித்த காலனுக்குத் தூதரானவர் கையில் இனிமேல்  படுத்து உறங்கு எனச் சொல்கிறார்கள்.

 7) காட்டில் விளைந்த வரகில் சமைத்த உணவு மழைக்கால மாலையில் சூடாக உண்ணச் சுவை மிகுந்திருக்கும்.இத்தொடரில் அமைந்துள்ள முதற்பொருள், கருப்பொருள்களை வகைப்படுத்தி எழுதுக.

·       முதற்பொருள்: காடு,மழைக்காலம்,மாலை

·       கருப்பொருள்: உணவு-வரகு

8] கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருளைத் திருத்தி எழுதுக.

·       உழவர்கள் மலையில் உழுதனர் - குறவர் மலையில் தேனெடுத்தனர்.

·       முல்லைப்பூச் செடியை பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.

                நெய்தற்பூச் செடியை பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.

                                        cilck here to download ---குறுவினாக்கள் pdf 

Post a Comment

Previous Post Next Post