பத்தாம் வகுப்பு
சிறுவினாக்கள்
இயல் 1 -3
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக இதுவரை பல்வேறு பகுதிகளாகப் பயிற்சித்தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. மேலும் அலகுத் தேர்வுகள் நடத்தப்பட்டால் மாணவர்கள் பாடங்களைக் கற்பது எளிதாகவும் இருக்கும், பாடப்பகுதிகளைச் சிறுசிறு பகுதிகளாகப் பிரித்துப் பயிற்சி அளிக்க வசதியாகவும் இருக்கும். இதைக் கருத்திற்கொண்டு மொழிப்பயிற்சிப் பகுதிக்கான வினாத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. தற்போது தேர்வுக்கு மாணவர்களை ஆயத்தம் செய்வது மிகுந்த அவசியமாகிறது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நிலை தொடராது என்றே அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. எனவே பெரும்பாலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடைபெறும் என்றே தெரியவருகிறது. இதை உறுதிசெய்யும் விதமாக இன்று ஊடகங்களுக்குப் பேட்டியளித்த மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், வரும் பிப்ரவரி மாதம் முதல் பத்து, பன்னிரண்டு ஆகிய வகுப்புகளைத் திறக்க அரசிடம் பரிந்துரைத்- துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் பத்து மற்றும் பன்னிரண்டு ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் இறுதி அல்லது மே முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனவே பொதுத் தேர்வு ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில் அதற்கு நாம் தயாராவதே நன்மை பயக்கும். முதல் மூன்று இயல்களில் ஏற்கனவே பலமுறை தேர்வெழுதிப் பழகிவிட்டதால் நாம் அடுத்த மூன்று இயல்களுக்குச் செல்வோம். முன்பே முதல் மூன்று இயல் களுக்கான குறுவினாக்கள், சிறுவினாக்கள் மற்றும் நான்கு, ஐந்து, ஆறு இயல்களுக்கான குறுவினாக்கள் கொடுக்கப்பட்டன. இப்போது 4 முதல் 6 இயல்களிலுள்ள சிறுவினாக்களுக்கான விடைகளுடன் கூடிய வினாத்தாள் கொடுக்கப்பட்டுள்ளது . இதனை ஆசிரியர்களும் மாணவர்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மிகுந்த பணிச்சுமைகளுக்கிடையே தயாரிக்கப் பட்டுள்ளதால் பதிவிறக்கம் செய்த வினாத்தாளை நண்பர்களுக்கு அனுப்பாமல் இந்த இணைப்பை ( LINK ) அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
பத்தாம் வகுப்பு
சிறுவினாக்கள்
இயல் 4-6
1. மாளாத காதல் நோயாளன் போல இத்தொடரில் உள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக
மருத்துவர் உடலில் ஏறபடட புண்ணைக் கத்தியொல் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே
என்று உ்ணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார். வித்துவக்கோட்டில் எழுந்தருளியிருக்கும்
அன்னையே! அதுபோன்று நீ உ்னது விளையாட்டால் நீங்காத துன்பத்தை எ்னக்குத் தந்தாலும்
உன் அடியவனாகிய நான் உன் அருளையே எப்பொழுதும் எதிர்பார்த்து வாழ்கின்றேன்.