ஏழாம் வகுப்பு
தமிழ்
பருவம் - 1
கவிதைப் பேழை - காடு
மனித முயற்சியின்றி வளர்ந்த மரம்,செடி,கொடிகள், பலவகையான விலங்குகள்,பறவைகள்,பூச்சிகள் போன்றவற்றின் தொகுப்புதான் காடு. காட்டின் அழகான தோற்றம், சிறப்புகள், உயிரினங்களின் செயல்கள் ஆகியவற்றைப் பற்றிக் கவிஞர் சுரதா கூறுவனவற்றை இப்பகுதியில் காண்போம்.
கார்த்திகைத் தீபங்கள் போலக் காடெல்லாம் பூக்கள் பூத்திருக்கின்றன. அதைப் பார்த்தால் நம்முடைய பார்வை குளிரும். காடு பலவகையான பொருள்களைத் தருகிறது. காய்கனிகளைத் தரும்.எல்லாரும் கூடி மகிழ்ந்திடக் குளிர்ந்த நிழலையும் தரும். அங்கே வசிக்கும் குரங்குகள் கிளைகளிலுள்ள கனிகளைப் பறித்து உண்ணும். மரங்கள் வெயிலை மறைத்து நிழல் தரும். அடர்ந்த காடு வழிச்செல்வோர்க்குத் தடையாய் இருக்கும்.
பச்சை நிறம் உடைய மயில்கள் நடனமாடும். பன்றிகள் காட்டில் உள்ள கிழங்குகளைத் தோண்டி உண்ணும். அதனைக்கண்டு நஞ்சினை உடைய பாம்புகள் கலக்கமடையும். நரிக்கூட்டம் ஊளையிடும். மிகுந்த சுவையுடைய தழையை யானைகள் தின்றபடி புதிய நடைபோடும். பூக்கள் பூத்துக் குலுங்கும் மரங்களில் குயில்கள் கூவும். இயற்கைத் தங்குமிடமாகிய காட்டில் சிங்கம்,புலி,கரடி,சிறுத்தை போன்ற விலங்கினங்கள் எங்கும் அலைந்து திரியும்.
மதிப்பீடு :
பணித்தாள்-
தமிழ்
வகுப்பு : ஏழாம் வகுப்பு தலைப்பு
: காடு
பருவம் : 1 மதிப்பெண்
: 10
அ.
சரியான விடையைத் தேர்ந்தெடுக:-
1.வாழை,
கன்றை------------ .
அ.
ஈன்றது ஆ.
வழங்கியது இ. கொடுத்தது ஈ.தந்தது
2.’காடெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது-----------.
அ.
காடு + டெல்லாம் ஆ. காடு+எல்லாம் இ. கா+டெல்லாம் ஈ. கான்+எல்லாம்
3. ‘கிழங்கு+எடுக்கும்’ இச்சொல்லைச் சேர்த்தெழுதக் கிடைப்பது----------.
அ. கிழங்குஎடுக்கும் ஆ. கிழங்கொடுக்கும் இ. கிழங்குடுக்கும் ஈ. கிழங்கெடுக்கும்
4. இராசகோபாலன் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர்-----------.
அ. பாரதியார் ஆ. உடுமலைக்கவி இ. சுரதா ஈ. கவிமணி
5 . கீழ்க்கண்டவற்றுள் சுரதா எழுதாத நூல் ---------------.
அ.
தேன்மழை ஆ. குடும்ப
விளக்கு இ. துறைமுகம் ஈ. அமுதும் தேனும்
6. கார்த்திகை விளக்குகள் போன்று
இருந்தவை------------.
அ.
காடு ஆ. காய்கனி இ.
மலர்கள் ஈ. மயில்
ஆ.
பொருத்துக:-
7. அதிமதுரம் - மகிழ்ந்திட
8.
களித்திட - மிகுந்த சுவை
9.
கொம்பு -
பெற்று
10.
ஈன்று - கிளை
liveworksheets.com