10TH- TAMIL - UNIT TEST 9 QUESTION PAPER - REDUCED SYLLABUS- PDF

                                                             பத்தாம் வகுப்பு - தமிழ்

குறைக்கப்பட்ட பாடப்பகுதி
அலகுத்தேர்வு -9 வினாத்தாள்




        பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக இதுவரை பல்வேறு பகுதிகளாகப் பயிற்சித்தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. இப்போது அலகுத்தேர்வு வினாத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்படவிருக்கின்றன. இறுதி இயலான ஒன்பதாம் இயலிலிருந்து தொடங்க இருக்கிறோம். PDF வடிவத்தில் கொடுத்தால் பதிவிறக்கம் செய்வதும் படியெடுப்பதும் எளிது என்பதால் PDF வடிவத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மிகுந்த பணிச்சுமைகளுக்கிடையே தயாரிக்கப்பட்டுள்ளதால் பதிவிறக்கம் செய்த வினாத்தாளை நண்பர்களுக்கு அனுப்பாமல் இந்த இணைப்பை ( LINK ) அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன். 
நன்றி, வணக்கம்!

பத்தாம் வகுப்பு - தமிழ்

குறைக்கப்பட்ட பாடப்பகுதி
அலகுத்தேர்வு -9 -வினாத்தாள்

பத்தாம் வகுப்பு

அலகுத்தேர்வு - 9

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.              5 x 1 =5

1. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது-----------------------------------.

அ) அறிவியல் முன்னேற்றம்   

ஆ) வெளிநாட்டு முதலீடுகள்

இ) நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்        

ஈ) சுதந்திரத்தைப் பாதுகாத்தல்

2 ) வாழ்மையே மழைநீராகி - இத்தொடரில் வெளிப்படும் அணி

அ) உவமை        ஆ) தற்குறிப்பேற்றம்    இ) உருவகம்    ஈ) தீவகம்

3. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவோடு காக்க என்று------------- வேண்டினார்.

அ) கருணையன் எலிசபெத்துக்காக   ஆ) எலிசபெத், தமக்காக

இ) கருணையன், பூக்களுக்காக              ஈ) எலிசபெத், பூமிக்காக

4. தீவக அணி --------------------------வகைப்படும்.

அ) இரண்டு       ஆ) நான்கு         இ) மூன்று           ஈ) ஐந்து

5. உலக விருப்பம் இல்லாமல் வாழ்ந்தார் இத்தொடருக்கேற்ற   

     மரபுத்தொடர் எது?

அ) மழை காணாப் பயிர் போல     ஆ) சிலைமேல் எழுத்து போல

இ) ஆகாயத்தாமரை போல           ஈ) தாமரை இலை நீர் போல

ஆ) குறுகிய விடையளிக்க                                                5 x 2=10

6. காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன் - உவமை உணர்த்தும் கருத்து யாது?

7. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

    பண்பும்  பயனும் அது- இக்குறளில் பயின்று வந்துள்ள அணியின்  

   இலக்கணம் யாது?

8. நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு- இத்தொடரை இரு தொடர்களாக்குக

9. தீவக அணி என்றால் என்ன?

10.ஒலித்து- இச்சொல்லிற்குப் பகுபத உறுப்பிலக்கணம் எழுதுக.

இ) ஐந்து வரிகளுக்கு மிகாமல் விடையளிக்க         3 x 4= 1 2

11. எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?

12. கவிஞர் தாம் கூறவிரும்பும் கருத்திற்கு ஏற்ப தற்குறிப்பேற்ற அணி அமைவதை விளக்குக

13. கம்பனும் கண்டேத்தும் உமறுப் புலவரை எந்தக்

     கொம்பனும் பணியும் அறம்பாடுஞ் ஜவாது ஆசுகவியை

     காசிம்புலவரை, குணங்குடியாரை சேகனாப் புலவரை

     செய்குதம்பிப் பாவலரைச் சீர்தமிழ் மறக்காதன்றோ -      இப்பாடலில்

     இடம்பெற்றுள்ள தமிழ்ப்புலவர்களின் பெயர்களை எழுதுக

ஈ) 20 வரிகளுக்கு மிகாமல் விடையளிக்க                                                        7 x 1 =7

கருணையனின் தாய் மறைவுக்கு, வீரமாமுனிவர் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.

உ) உங்கள் பள்ளியில் நடைபெறும் நாட்டுநலப்பணித் திட்ட முகாமின் தொடக்க விழாவில் மானவர்களுக்கு வாழ்த்துரை வழங்க உரை ஒன்று தயாரிக்க                                                                                                                             7 x 1 =7

எ) நவமணி எனத் தொடங்கும் தேம்பாவணிப் பாடலை எழுதுக       5 x 1 =5


Post a Comment

Previous Post Next Post