குறுவினா
1] வேங்கை என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
·
வேம் + கை (வேகின்ற
கை ) என இருசொற்களாகப் பிரிந்து தொடர்மொழியாகிறது.
·
வேங்கை -- வேங்கை என்னும் மரத்தைக் குறிக்கும் [தனிமொழி]
·
இவ்வாறு தனிமொழிக்கும்
தொடர்மொழிக்கும் பொதுவாக அமைவதால் வேங்கை என்பது
பொதுமொழியாகும்.
2] “மன்னும் சிலம்பே மணிமே கலைவடிவே”
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே” –இவ்வடிகளில்
இடம்
பெற்றுள்ள காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின்
பெயர்களை எழுதுக.
·
சீவகசிந்தாமணி
·
வளையாபதி
·
குண்டலகேசி
3] ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.
மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி,எஞ்சிய பிழையான
தொடரில் உள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.
சரியான தொடர்கள் |
பிழையான தொடர் |
ஒருதாற்றில் பல சீப்பு வாழைப்
பழங்கள் உள்ளன ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள்
உள்ளன.
|
ஒரு சீப்பில் பலதாறு வாழைப்பழங்கள்
உள்ளன. பிழைக்கான
காரணம் பல சீப்புகள் சேர்ந்ததுதான்
தாறு. |
4] ‘உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண் வற்றாகும் கீழ்’ – இக்குறளில் அமைந்துள்ள
அளபெடையின் வகையைச் சுட்டி அதன் இலக்கணம் தருக.
* இன்னிசை அளபெடை வந்துள்ளது.
* செய்யுளில்
ஓசை குறையாத இடத்தும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது
இன்னிசை
அளபெடை எனப்படும்.
5]
வசன கவிதை -- குறிப்பு வரைக.
·
உரைநடையும் கவிதையும் இணைத்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன
கவிதை எனப்படும்.
6] தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத்தொடர்களை விரித்து எழுதுக. தொடரில்
அமைக்க.
·
தண்ணீர் குடி
- தண்ணீரைக் குடி- இரண்டாம் வேற்றுமைத் தொகை
·
தயிர்க்குடம் - தயிரை
உடைய குடம் – இரண்டாம் வேற்றுமை உருபும்பயனும்
உடன்தொக்கத் தொகை
·
இராமன் தண்ணீர்
குடித்தான்.
·
கண்ணகி தயிர்க்குடம்
கொண்டு வந்தாள்.
7] பெற்றோர் வேலையிலிருந்து திரும்பத் தாமதமாகும்போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல்
சொற்களை எழுதுக.
·
“தம்பி, அழாதே
! அப்பாவும் அம்மாவும் விரைவில் வந்து விடுவார்கள்.
· வரும்போது விளையாட்டு பொருள் வாங்கி வருவார்கள்.”
8] மாஅல் – பொருளும் இலக்கணக் குறிப்பும் தருக.
· பொருள்
— திருமால்
· இலக்கணக்குறிப்பு -- உரிச்சொல் தொடர்.
9]
எழுது என்றாள் என்பது விரைவு காரணமாக “எழுது எழுது என்றாள்” எனஅடுக்குத்தொடரானது.
சிரித்துப் பேசினார் என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?
·
சிரித்து சிரித்துப்
பேசினாள்.
10]
பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார்,அவர் யார்? ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும்
பயனிலைகள் யாவை?
·
பாரதியார் கவிஞர் -- பெயர்
பயனிலை.
·
நூலகம் சென்றார் -- வினைப்
பயனிலை
·
அவர் யார் ? -- வினாப்
பயனிலை
11]
நச்சப் படாதவன் பெற்ற செல்வம் – இத்தொடரில் அடிக்கோடிட்ட
சொல்லுக்குப் பொருள் தருக.
·
பிறருக்கு உதவிசெய்யாததால்
ஒருவராலும் விரும்பப்படாதவன்
12]கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு
அடுக்கிய
கோடிஉண் டாயினும் இல்
– இக்குறளில் வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக.
·
இன்னிசை அளபெடை
13]
பொருளுக்கேற்ற அடியைப் பொருத்துக
உயிரைவிடச் சிறப்பாகப் பேணிக்காக்கப்படும் - ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை 3
ஊரின் நடுவில் நச்சுமரம் பழுத்தது போன்றது - உயிரினும் ஓம்பப் படும் 1
ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர் - நடு
ஊருள் நச்சு மரம் பழுத்தற்று 2
14]
எய்துவர் எய்தாப் பழி- இக்குறளடிக்குப் பொருத்தமான வாய்ப்பாடு எது?
அ] கூவிளம்
தேமா மலர் ஆ] கூவிளம் புளிமா நாள்
இ] கருவிளம் கூவிளம் பிறப்பு ஈ] தேமா புளிமா காசு
15] மருத்துவத்தில்மருந்துடன்
அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பங்கினை எழுதுக.
மருத்துவர், தனக்கு ஏற்பட்ட புண்ணை, துன்பம் தரும்படி கத்தியால்
அறுத்துச் சுட்டாலும் அத்துன்பம் தனக்கு நன்மையே என்று உணர்ந்து நோயாளி மருத்துவர்
மீது அன்பு காட்டுவார்.
16]சீசர்
எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான்.புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க
மாட்டான் என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார்- இதில்
உள்ள திணை வழுவமைதிகளைத் திருத்தி எழுதுக.
சீசர் எப்போதும் என் சொல் பேச்சைக் கேட்கும்.புதியவர்களைப்
பார்த்துத் குரைக்குமே தவிர கடிக்காது என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றி
பெருமையாகக் கூறினார்.
17] செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய
கருத்தினை முழக்கத்
தொடர்களாக்குக.
·
கற்போம் ! கற்போம்
! அருளைப் பெருக்கக் கற்போம் !
·
கற்போம்! கற்போம் !
அறிவினைப் பெறக் கற்போம் !
18] அமர்ந்தான் பகுபத உறுப்பிலக்கணம்
தருக.
அமர்ந்தான் = அமர் + த் (ந்) + த் +
ஆன்
அமர்- பகுதி; த் - சந்தி ; ந் - விகாரம் த்
– இறந்தகால இடைநிலை ஆன் – ஆண்பால் வினைமுற்று
விகுதி
19] இந்த அறை இருட்டாக
இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? இதோ…. இருக்கிறதே சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம்
வரவில்லையே? மின்சாரம் இருக்கிறதா?இல்லையா? மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை
எடுத்து எழுதுக.
· மின் விளக்கின் சொடுக்கி எந்தப்பக்கம்
இருக்கிறது? அறியா வினா
·
இதோ இருக்கிறதே!
- சுட்டு
விடை
· சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே மின்சாரம் இருக்கிறதா? இல்லையா? - ஐய வினா
20] “உறங்குகின்ற கும்பகன்ன”
‘எழுந்திராய் எழுந்திராய்’
காலதூதர் கையிலே ‘உறங்குவாய் உறங்குவாய்” கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு உறங்கச் சொல்லுகிறார்கள்?
எழுப்புதல்: கும்பகன்னனுடைய பொய்யான வாழ்வு எல்லாம் இன்றிலிருந்து
இறங்குவதற்குத்
தொடங்கி விட்டது என்பதனைக் காண அவனை எழுப்புகிறார்கள்.
உறங்கச் சொல்லுதல்: காற்றாடி
போல எல்லா இடங்களில் திரிகின்ற வில்லைப் பிடித்த
காலனுக்குத் தூதரானவர்
கையில் இனிமேல் படுத்து உறங்கு எனச்
சொல்கிறார்கள்.
21] காட்டில் விளைந்த வரகில் சமைத்த உணவு மழைக்கால
மாலையில் சூடாக உண்ணச் சுவை மிகுந்திருக்கும்.இத்தொடரில் அமைந்துள்ள முதற்பொருள், கருப்பொருள்களை
வகைப்படுத்தி எழுதுக.
·
முதற்பொருள்:
காடு,மழைக்காலம்,மாலை
·
கருப்பொருள்:
உணவு-வரகு
22] கீழ்வரும் தொடர்களில்
பொருந்தாத கருப்பொருளைத் திருத்தி எழுதுக.
· உழவர்கள் மலையில் உழுதனர் - குறவர் மலையில் தேனெடுத்தனர்.
·
முல்லைப்பூச்
செடியை பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
நெய்தற்பூச் செடியை பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
23] வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர்
மா.பொ.சி என்பதற்கு சான்று தருக.
·
நூல் வாங்குவதற்குப்
போதிய பணமில்லாததால் பழைய புத்தங்கள் விற்கும் கடைகளுக்குச் சென்று, தனக்கு விருப்பமான
புத்தகங்களை மிகக் குறைந்த விலைக்கு வாங்கினார்.
·
உணவுக்காக வைத்திருந்த
பணத்தில் புத்தகங்கள் வாங்கிவிட்டு பல வேளைகளில் பட்டினி கிடந்திருக்கிறார்.
·
குறைந்த விலைக்கு
நல்ல நூல் கிடைத்தால் பேரானந்தம் கொள்வார்
24]
பொருத்தமான இடங்களில் நிறுத்தக் குறியிடுக.
பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி
சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சேரன்
ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு
ஆங்கிலேயர்க்கு அடிமைப்பட்டிருந்த
சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட
வருமாறு தமிழர்களுக்கு அழைப்பு
விடுத்திருந்தேன்—மா.பொ.சி
பழங்கலாத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக்
கூறி,சோழன்
ஆண்ட சிறப்பைச்
சொல்லி,சேரன் அண்ட மாண்பினைக் காட்டி,நம்
அருமைத் தமிழ்நாடு
ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த
சிறுமையையும்
நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு
அழைப்பு விடுத்திருந்தேன்-மா.பொ.சி.
25] மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?
மெய்க்கீர்த்தி பற்றி நீங்கள் அறிந்த கருத்துக்கள் யாவை?
·
நாட்டின் வளத்தையும்
ஆட்சிச் சிறப்பையும் கூறுவது மெய்க்கீர்த்தி.
·
மெய்க்கீர்த்தி
என்பதற்கு உண்மையான புகழ் என்று பொருள்.
·
அரசர்கள் தங்கள்
வரலாறும் பெருமையும் காலம் கடந்து நிலைக்க விரும்பினர். அதை அழியாத வகையில் கல்லில்
செதுக்கினார்கள்.
26] பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர்- சிலப்பதிகாரம்
காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?
·
பாசவர் – வெற்றிலை
விற்பவர்
·
வாசகர் – ஏலம்
முதலான ஐந்து நறுமணப் பொருள்கள் விற்பவர்.
·
பல்நிண வினைஞர்
– பலவகையான இறைச்சி விற்பவர்.
·
உமணர் – வெண்மையான
உப்பு விற்கும் வணிகர்.
27] புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.
வெட்சித் திணை : ஆநிரை கவர்தல் ; கரந்தைத்
திணை : ஆநிரை மீட்டல்
வஞ்சித் திணை : பகைவர் நாட்டை கைப்பற்றல் ; காஞ்சித் திணை : நாட்டை பாதுகாத்தல்
நொச்சித் திணை : கோட்டையைப்
பாதுகாத்தல் ; உழிஞைத் திணை : கோட்டையைச் சுற்றி வளைத்தல்.
28] குறிப்பு வரைக. அவையம்.
·
அறம் கூறும் மன்றங்களே
அவையம் எனப்பட்டது.
·
இவை,அரசரின் அறநெறி
ஆட்சிக்குத் துணைபுரிந்தன.
·
உறையூரிலிருந்த
அறஅவையம் தனிச்சிறப்பு பெற்றது.
·
மதுரையில் இருந்த
அவையம் பற்றி மதுரைக்காஞ்சி கூறுகிறது.
29] கொள்வோர் கொள்க; குரைப்போர்
குரைக்க
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது” அடி எதுகை,
இலக்கணக் குறிப்பு தருக.
அடிஎதுகை = கொள்வோர்-உள்வாய்
இலக்கணக்குறிப்பு = கொள்க,குறைக்க—வியங்கோள்
வினைமுற்று
30] ஜெயகாந்தன் பெற்ற விருதுகள்
யாவை?
·
குடியரசுத்தலைவர்
விருது [உன்னைப்போல் ஒருவன்]
·
சாகித்திய அகாதெமி
விருது [சில நேரங்களில் சில மனிதர்கள்]
·
சோவியத் நாட்டு
விருது [இமயத்திற்கு அப்பால்]
·
ஞானப்பீட விருது
·
தாமரைத்திரு விருது
31] ஜெயகாந்தன் தன் எழுத்தின் மூலம் மக்களுக்கு
எவற்றை உணர்த்துவதில் முனைப்பாக இருந்தார்?
·
சமூக அமைப்பின்
முரண்பாடுகளை எழுத்திலே அப்பட்டமாக காட்டியவர்
·
நேர்முக,எதிர்முக
விளைவுகளைப் பெற்றவர்
·
தன்னையறிதல் என்பதிலும்
தன்னை உணர்த்துதல் என்பதிலும் ஜெயகாந்தன் முனைப்பாக இருந்தார்.
32] “காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன்”-உவமை
உணர்த்தும் கருத்து யாது?
·
மழைத்துளி இல்லாமல்
நெல்மணிகளைக் காணும் முன்னே வாடிகாய்ந்துவிட்டதைப் போல, நானும் என் தாயை இழந்து வாடுகிறேன்.
33] தீவக அணியின் வகைகள் யாவை?
·
தீவக அணி மூன்று
வகைப்படும்.அவை
·
முதல் நிலைத்
தீவகம்
·
இடைநிலைத் தீவகம்
·
கடைநிலைத் தீவகம்
34] நான் எழுதுவதற்கும் ஒரு தூண்டுதலுக்கும் அதற்குரிய
காரணமும் உண்டு- இத்தொடரை
இரு தொடர்களாக்குக.
·
நான் எழுதுவதற்கு
ஒரு தூண்டுதல் உண்டு.
·
அதற்கு ஒரு காரணமும்
உண்டு.
35] அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும்
பயனும் அது.—இக்குறளில் பயின்று வந்த அணியின் இலக்கணம் யாது?
·
இப்பாடலில் நிரல்நிறை
அணி பயின்று வந்துள்ளது.
·
நிரல்—வரிசை நிறை—நிறுத்தல்.
·
சொல்லையும் பொருளையும்
வரிசையாக நிறுத்தி வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது நிரல் நிறை அணி எனப்படும்.