10TH - TAMIL - குறுவினாக்கள் -UNIT 1- 3 PDF

 பத்தாம் வகுப்பு

குறுவினாக்கள்

இயல் 1 -3



பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக இதுவரை பல்வேறு பகுதிகளாகப் பயிற்சித்தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. மேலும் அலகுத் தேர்வுகள் நடத்தப்பட்டால் மாணவர்கள் பாடங்களைக் கற்பது எளிதாகவும் இருக்கும், பாடப்பகுதிகளைச் சிறுசிறு பகுதிகளாகப் பிரித்துப் பயிற்சி அளிக்க வசதியாகவும் இருக்கும். இதைக் கருத்திற்கொண்டு மொழிப்பயிற்சிப் பகுதிக்கான வினாத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. தற்போது ஜனவரி 19 முதல் திருப்புதல் தேர்வு- 1 நடைபெற இருக்கிறது. இதேர்வுக்கு மாணவர்களை ஆயத்தம் செய்வது மிகுந்த அவசியமாகிறது. இம்முறை மாணவர்களின் விடைத்தாள்கள் பிற பள்ளிகளில் அளிக்கப்பட்டு, திருத்தப்பட இருக்கின்றன. இதனால் இத்தேர்வு ஒரு சிறிய அளவிலான பொதுதேர்வாகவே பார்க்கப்பட வேண்டும். கொரோனா காரணமாக ஒருவேளை பள்ளிகள் மூடப்படக் கூடிய சூழலும் பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டிய சூழலும் ஏர்படுமானால் இத்தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படக் கூடிய வாய்ப்பு அதிகம். எனவே மாணவர்கள் இத்தேர்வை மிகுந்த கவனமுடன் எழுத வேண்டும். எனவே இதைக் கருத்திற்கொண்டு முதல் மூன்ரு இயல்களுக்கான குறுவினாக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. விடைகளுடன் கூடிய வினாத்தாளும், விடையில்லாத பயிற்சித்தாளும் தனித்தனியே கொடுக்கப்பட்டுள்ளன. இதனை ஆசிரியர்களும் மானவர்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மிகுந்த பணிச்சுமைகளுக்கிடையே தயாரிக்கப் பட்டுள்ளதால் பதிவிறக்கம் செய்த வினாத்தாளை நண்பர்களுக்கு அனுப்பாமல் இந்த இணைப்பை  ( LINK ) அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.  

பத்தாம் வகுப்பு

                                                    தமிழ்                                                    

குறுவினா இயல் 1 ---3

  1] வேங்கை என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும்  வேறுபடுத்திக் காட்டுக.

·       வேம் + கை (வேகின்ற கை ) என இருசொற்களாகப் பிரிந்து தொடர்மொழியாகிறது.

·       வேங்கை  -- வேங்கை என்னும் மரத்தைக் குறிக்கும் [தனிமொழி]

·       இவ்வாறு தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாக அமைவதால்  வேங்கை என்பது பொதுமொழியாகும்.

  2] “மன்னும் சிலம்பே மணிமே கலைவடிவே”

     முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே” –இவ்வடிகளில் இடம்       

     பெற்றுள்ள காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின்

     பெயர்களை எழுதுக.

·       சீவகசிந்தாமணி

·       வளையாபதி                                          

·       குண்டலகேசி

  3] ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.

    ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.

    ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.

    மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி,எஞ்சிய பிழையான     

    தொடரில் உள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.

  4] ‘உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண் வற்றாகும் கீழ்’ –  

       இக்குறளில் அமைந்துள்ள  அளபெடையின் வகையைச் சுட்டி  அதன்    இலக்கணம்        

        தருக.                                                                                                     

      * இன்னிசை அளபெடை வந்துள்ளது.

      * செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது

        இன்னிசை அளபெடை எனப்படும்.

   5] வசன கவிதை -- குறிப்பு வரைக.                                                        

·       உரைநடையும் கவிதையும் இணைத்து யாப்புக் கட்டுகளுக்கு  அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை  வடிவம் வசன  கவிதை எனப்படும்.

   6] தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத்தொடர்களை விரித்து எழுதுக. 

        தொடரில் அமைக்க.

·       தண்ணீர் குடி -  தண்ணீரைக் குடி- இரண்டாம் வேற்றுமைத் தொகை

·       தயிர்க்குடம்   -  தயிரை உடைய குடம் – இரண்டாம் வேற்றுமை   உருபும்பயனும் உடன்தொக்கத்                                                                                                                    தொகை

·       இராமன் தண்ணீர் குடித்தான்.

·       கண்ணகி தயிர்க்குடம் கொண்டு வந்தாள்.

   7] பெற்றோர் வேலையிலிருந்து திரும்பத் தாமதமாகும்போது அழும்  தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல்   

         சொற்களை எழுதுக.

·       “தம்பி, அழாதே ! அப்பாவும் அம்மாவும் விரைவில் வந்து விடுவார்கள்.

·       வரும்போது விளையாட்டு பொருள் வாங்கி வருவார்கள்.”

   8] மாஅல் – பொருளும் இலக்கணக் குறிப்பும் தருக.

·       பொருள்                  திருமால்

·       இலக்கணக்குறிப்பு --     உரிச்சொல் தொடர்.

 9] எழுது என்றாள் என்பது விரைவு காரணமாக “எழுது எழுது என்றாள்” எனஅடுக்குத்தொடரானது.

      சிரித்துப் பேசினார் என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?

·       சிரித்து சிரித்துப் பேசினாள்.

  10] பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார்,அவர் யார்? ஆகிய தொடர்களில்   எழுவாயுடன் தொடரும்     

          பயனிலைகள் யாவை?

·       பாரதியார் கவிஞர்   --  பெயர் பயனிலை.

·       நூலகம் சென்றார்   --  வினைப் பயனிலை                                           

·       அவர் யார் ?              --  வினாப் பயனிலை 

 11] நச்சப் படாதவன் பெற்ற செல்வம் – இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லுக்குப் 

பொருள் தருக.

·       பிறருக்கு உதவிசெய்யாததால் ஒருவராலும் விரும்பப்படாதவன்

12]கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய

கோடிஉண் டாயினும் இல் – இக்குறளில் வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக.

·       இன்னிசை அளபெடை

13] பொருளுக்கேற்ற அடியைப் பொருத்துக

உயிரைவிடச் சிறப்பாகப் பேணிக்காக்கப்படும்    -    ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை 3

ஊரின் நடுவில் நச்சுமரம் பழுத்தது போன்றது     -     உயிரினும் ஓம்பப் படும் 1

ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர்                      -     நடு ஊருள் நச்சு மரம் பழுத்தற்று 2

                                        cilck here to download ---குறுவினாக்கள் pdf

                


Post a Comment

Previous Post Next Post