10 TH - TAMIL - ONE MARKS - UNIT 1 - 3 PDF & WORSHEET

 பத்தாம் வகுப்பு

ஒருமதிப்பெண் வினாக்கள்

இயல் 1 -3



பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக இதுவரை பல்வேறு பகுதிகளாகப் பயிற்சித்தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. மேலும் அலகுத் தேர்வுகள் நடத்தப்பட்டால் மாணவர்கள் பாடங்களைக் கற்பது எளிதாகவும் இருக்கும், பாடப்பகுதிகளைச் சிறுசிறு பகுதிகளாகப் பிரித்துப் பயிற்சி அளிக்க வசதியாகவும் இருக்கும். இதைக் கருத்திற்கொண்டு மொழிப்பயிற்சிப் பகுதிக்கான வினாத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. தற்போது ஜனவரி 19 முதல் திருப்புதல் தேர்வு- 1 நடைபெற இருக்கிறது. இதேர்வுக்கு மாணவர்களை ஆயத்தம் செய்வது மிகுந்த அவசியமாகிறது. இம்முறை மாணவர்களின் விடைத்தாள்கள் பிற பள்ளிகளில் அளிக்கப்பட்டு, திருத்தப்பட இருக்கின்றன. இதனால் இத்தேர்வு ஒரு சிறிய அளவிலான பொதுதேர்வாகவே பார்க்கப்பட வேண்டும். கொரோனா காரணமாக ஒருவேளை பள்ளிகள் மூடப்படக் கூடிய சூழலும் பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டிய சூழலும் ஏர்படுமானால் இத்தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படக் கூடிய வாய்ப்பு அதிகம். எனவே மாணவர்கள் இத்தேர்வை மிகுந்த கவனமுடன் எழுத வேண்டும். எனவே இதைக் கருத்திற்கொண்டு முதல் மூன்ரு இயல்களுக்கான ஒருமதிப்பெண் வினாக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விடைகளுடன் கூடிய வினாத்தாளும், விடையில்லாத பயிற்சித்தாளும் தனித்தனியே கொடுக்கப்பட்டுள்ளன. இதனை ஆசிரியர்களும் மானவர்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மிகுந்த பணிச்சுமைகளுக்கிடையே தயாரிக்கப் பட்டுள்ளதால் பதிவிறக்கம் செய்த வினாத்தாளை நண்பர்களுக்கு அனுப்பாமல் இந்த இணைப்பை  ( LINK ) அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன். 

நன்றி, வணக்கம்! 

பத்தாம் வகுப்பு

ஒருமதிப்பெண் வினாக்கள்

இயல்  1 – 3

1. ‘காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்’ நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில்  

   அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது--------------.                                           

2. ‘கேட்டவர் மகிழப் பாடிய பாடல்’ இத்தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயர் மற்றும்                              வினையாலணையும் பெயர் முறையே---------------

3. வேர்க்கடலை, மிளகாய் விதை , மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை-----------

4. கனிச்சாறு என்ற நூலின் ஆசிரியர் ----------------------.                                     

5.பாவலரேறு என்று அழைக்கப்படுபவர்-------------------.                                    

6. தமிழுக்குக் கருவூலமாய் அமைந்த நூல் ------------.        

7. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலின் ஆசிரியர் ----------------------------

8. புளி, வேம்பு ஆய்யவற்றின் கொழுந்து -----எனப்படும்.                        

9.கரும்பின் நுனிப்பகுதி --------------எனப்படும்.                                              

10. பூவின் தோற்றநிலை -------------எனப்படும்.                          

11. பூ வாடின நிலை --------------- எனப்படும்.                                                                 

12.திருவள்ளுவர் தவச்சாலை அமைத்தவர்-------------.                                  

13. இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றல் உடையவர்கள்            

14. இளம்பாக்கு -------------எனப்படும்.                                                                              

15.  வாழைப்பிஞ்சு ----------------எனப்படும் .                                                                   

16. புளி, காஞ்சிரை இவற்றின் வித்து -------------எனப்படும்.               

17. குட்டி என்பது ------------------ன் இளநிலை.                                                  

18. சம்பா அரிசியில் --------------உள்வகைகள் உள்ளன.                               

19. தமிழ்ச்சொல்வளம் என்ற கட்டுரையை எழுதியவர்-----

20. மொழிஞாயிறு என்று அழைக்கப்படுபவர்--------                   

21. சார்பெழுத்துகள் -----------வகைப்படும்.                                                          

22. உயிரளபெடை -----------வகைப்படும் .                                                                   

23. செய்யுளிசை அளபெடையின் வேறுபெயர்                                              

24. இனிய ஓசைக்காக அளபெடுப்பது----------                           

25.பெயர்ச்சொல்லை எச்சச்சொல்லாக மாற்ற அளபெடுப்பது----------------------      .

26. ஒற்றளபெடையில் அளபெடுக்கும் எழுத்துகளின் எண்ணிக்கை-------------------------     

27. மொழி---------வகைப்படும்.                                                                                         

28. ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருவது---------. 

29.நடத்தல், வாழ்க்கை, ஆளல் என்பவை ----------------ஆகும்.

30. நடவாமை, கொல்லாமை, பொய்யாமை என்பவை -

31. வினைப்பகுதியே தொழிற்பெயராக வருவது-----------

32.கேடு, சூடு என்பவை ----------------------.                             

33. ‘உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்

        உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்- பாரதியின் இவ்வடிகளில் 

இடம்பெற்றுள்ள நயங்கள் --------------------

34. பெரிய மீசை சிரித்தார் – என்பது ------------------------                    

35. தொகைநிலைத்தொடர் ---------------வகைப்படும்.                              

36. தேர்ப்பாகன், தண்ணீர்க்குடம் என்பவை --------------.                      

37. காலம் கரந்த பெயரெச்சம் -----------------எனப்படும்.                             

38. வீசுதென்றல், கொல்களிறு, தொடுதிரை என்பவை              

39. வெண்டைக்காய், தாமரைப்பூ என்பவை ---------------.   

40. சிந்துக்குத் தந்தை என்று புகழப்படுபவர்-----------.                            

41. வசன கவிதையைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர்               

42. கரிசல் இலக்கியம் -----------------பகுதியைச் சேர்ந்தது.                     

43. கரிசல் இலக்கியத்தை நிலைநிறுத்தியவர்-----------------.               

44. கி.ராஜநாராயணனின் ஊர் -----------------.                                                                          

45. கரிசல் வட்டாரச் சொல்லகராதியை உருவாக்கியவர்---

46. தொகைநிலைத் தொடர்கள் ---------------வகைப்படும்.                    

47. மாநகர், சாலப்பசித்தது, தவமுனிவன், உறுபசி இவை----------------          

48. ஒன்றிற்கு மேற்பட்ட எச்சங்கள் சேர்ந்து பெரைக்கொண்டு முடிவது-----.

49. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய தொடர்களில் பொருள் வேறுபாட்டிற்குக்   

        காரணமாக அமைவது------------------.                                                                  .

50. எய்துவர் எய்தாப் பழி – இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பாடு----------------------                 

                                                           

பயிற்சித்தாள்

வினாத்தாள்



Post a Comment

Previous Post Next Post