8TH - TAMIL - வருமுன் காப்போம் - QUIZ - UNIT 3

  எட்டாம் வகுப்பு

குறைக்கப்பட்ட பாடத்திட்டம் 
இயல் - 3
வருமுன் காப்போம்- QUIZ

        அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் மாணவர்களுக்கும் வணக்கம்! கடந்த நவம்பர் 1 முதல் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்புவரை அனைத்து வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன. கொரோனா ஊரடங்கு காரணமாகப் பள்ளிக்கு வெகுநாள்களாக வராமல் இருந்த மாணவர்கள் தற்போது வரத் தொடங்கியுள்ளனர். கடந்த ஓராண்டாக வீடுகளில் அடங்கியிருந்த மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்புகளை ஈடுசெய்யும் பொருட்டு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் புத்தாக்கப்பயிற்சிக் கட்டகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம் கடந்த இரு மாதங்களாகப் புத்தாக்கப் பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கி வந்தோம். தற்போது சற்றேறக்குறைய அனைத்துப் பள்ளிகளிலும் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் மூலம் மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பது நிறைவடைந்துள்ளது. ஆகையால் பாடத்திட்டங்களை நோக்கி நாம் நகரத் தொடங்கியுள்ளோம். மாணவர்கள் வெகுநாள்களுக்குப் பிறகு பள்ளிக்கு வருவதால் பாடங்களில் ஆர்வம் இல்லாமல் இருக்கக்கூடும். அவர்களின் கவனத்தைக் கவரும் வகையில் பாடங்களை நாம் நடத்தினால் மட்டுமே கற்றல் விளைவுகளை நாம் அடைய முடியும். எனவே புதிய முறைகளிலும் தொழில்நுட்ப வளங்களைப் பயன்படுத்தியும் நாம் பாடங்களை நடத்த வேண்டும். அதேபோல், மதிப்பிடுதலிலும் நாம் பல்வேறு முறைகளைப் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மாணவர்கள் ஆர்வமுடன் அதில் பங்கேற்க மாட்டார்கள். இதனால் உண்மையாகவே நல்ல திறனுள்ள மாணவர்கூட குறைந்த மதிப்பெண்களைப் பெறக்கூடும். இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. காணொலிகளும்,   PPT  மற்றும் அந்தந்த பாடங்களுக்குரிய பயிற்சித்தாள்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பதிவிறக்கம் செய்து கற்பித்தல் பணிகளுக்கும் மதிப்பீட்டுப் பணிகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தற்போது கொரோனா மூன்றாம் அலை அச்சம் காரணமாக ஒன்று முதல் எட்டு வகுப்புகளுக்கு மீண்டும் இணையவழிக் கல்வி தொடங்கப்பட வேண்டிய சூழலில் மாணவர்களின் அடைவை மதிப்பிட இணையவழித் தேர்வுகள் மிகவும் உதவுகின்றன. இதனைக் கருத்திற்கொண்டு எட்டாம் வகுப்புப் பாடங்களுக்கான இணையவழித் தேர்வுகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. மாணவர்களும் ஆசிரியர்களும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.



அரசு உயர்நிலைப்பள்ளி, அரங்கனூர்

பணித்தாள் - 7

வகுப்பு               : எட்டாம் வகுப்பு                                  பாடம் :தமிழ் பாடத்தலைப்பு : வருமுன் காப்போம்                                                          மதிப்பெண் : 10

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                                            6 X 1 = 6

1. காந்தியடிகள் ----------------போற்ற வாழ்ந்தார்.

அ) நிலம்                ஆ) வையம்         இ) களம்                 ஈ) வானம்

2. ‘நலமெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது--------.

அ) நலம் + எல்லாம்       ஆ) நலன் + எல்லாம்      இ) நலம் + எலாம்         ஈ) நலன் + எலாம்

3. இடம் + எங்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது----------------------------.

அ) இடவெங்கும்        ஆ) இடம்எங்கும்        இ) இடமெங்கும்          ஈ) இடம்மெங்கும்

4. மட்டு என்ற சொல்லின் பொருள் ------------ஆகும்.

அ) நன்கு          ஆ) உலகம்         இ)  தடுமாற்றம்             ஈ) அளவு

5. கவிமணி  என்று அழைக்கப்படுபவர்--------------------------.

அ) தேசிக விநாயகம்     ஆ) பாரதியார்      இ) பாரதிதாசன்               ஈ) கண்ணதாசன்

6. தேசிக விநாயகனார் மொழிபெயர்த்த நூல்---------------------.

அ) மருமக்கள்  வழி மான்யம்      ஆ)  உமர்கய்யாம் பாடல்கள்

இ) கதர் பிறந்த கதை                     ஈ) மலரும் மாலையும்

 

ஆ) குறுகிய விடையளி                                                                              2 X 2 = 4

7. நம்மை நோய் அணுகாமல் காப்பவை யாவை?

 

 

8. அதிகமாக உண்பதால் ஏர்படும் தீமைகளாகக் கவிமணி குறிப்பிடுவன யாவை?


CLICK HERE  ---- QUIZ

Post a Comment

Previous Post Next Post