பத்தாம் வகுப்பு
மொழிப்பயிற்சி - இயல் 6
பத்தாம் வகுப்பு - தமிழ்
பத்தாம் வகுப்பு
மொழிப்பயிற்சி – இயல் 6
Therukoothu is, as its name indicates, a popular form of
theatre performed in the streets. It is performed by rural artists. The stories
are derived from epic like Ramayana, Mahabharatha and other ancient
puranas.There are more songs in the play with dialogues improvised by the
artists on the spot. Fifteen to twenty actors with a small orchestra forms a
koothu troupe. Though the orchestra has a singer, the artists sing in their own
voices. Artists dress themselves with heavy costumes and bright makeup. Koothu
is very popular among rural areas.
தெருக்கூத்து என்பதன்
பெயருக்கேற்ப தெருக்களில் நடிக்கப்படும் புகழ் பெற்ற நாடக வடிவமாகும். இது கிராமப்புறக் கலைஞர்களால் நடத்தப்படும். இதன்
கதைகள் பெரும்பாலும் இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலிருந்தும் இவைபோன்ற புராணங்களிலிருந்தும்
எடுக்கப்பட்டவையாக இருக்கும். பெரும்பாலான பாடல்கள் மற்றும் உரையாடல்கள் மேடைக்கலைஞரால்
அந்தந்த நேரத்திலேயே உருவாக்கப்படுகின்றன. தெருக்கூத்துக் குழு பதினைந்து முதல் இருபது கலைஞர்கள் சேர்ந்து தெருக்கூத்துக் குழுவை உருவாக்குகின்றனர். குழுவிற்கென்று
பாடகர் இருந்தாலும், நாடகக் கலைஞர் தன்னுடைய
சொந்தக் குரலிலும் பாடுவர். அதிகமான உடைகளும், பளீரென்ற ஒப்பனையுடனும் ஒப்பனை
செய்துகொள்வர். கூத்து கிராமப்புறங்களில் மிகவும் புகழ்பெற்றது.
தொடர்களை
அடைப்புக்குறிக்குள் குறிப்ப்ட்டுள்ளவாறு மாற்றுக.
1. அழைப்புமணி ஒலித்தது. கயல்விழி கதவைத் திறந்தார்.
( கலவைத் தொடராக மாற்றுக)
அழைப்புமணி ஒலித்ததால், கயல்விழி கதவைத்
திறந்தார்.
2.
இன்னாசியார் புத்தகங்களை வரிசைப்படுத்தினார்.
அவற்றைப் புத்தக அடுக்கங்களில் அடுக்கி வைத்தார். புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு எடுத்துக்
கொடுத்தார். ( தொடர் சொற்றொடரக மாற்றுக.)
இன்னாசியார் புத்தகங்களை வரிசைப்படுத்தினார்
; அடுக்கங்களில் அடுக்கினார் ; கேட்டவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார்
3.
ஒயிலாட்டத்தில் குழுவினர் ஒரே நிறத் துணியை முண்டாசு போலக் கட்டிக்கொண்டு, காலில் சலங்கை
அணிந்துகொண்டு, கையில் ஒரு சிறுதுணியை இசைக்கேற்ப வீசியும் ஆடுவர். ( தனிச் சொற்றொடர்களாக
மாற்றுக )
ஒயிலாட்டத்தில் குழுவினர் ஒரே நிறத்
துணியை முண்டாசு போலக் கட்டிக் கொள்வர். காலில் சலங்கை அணிந்து கொள்வர். கையில் சிறுதுணியை
இசைக்கேற்ப வீசியும் ஆடுவர்.
4. கூத்துக் கலைஞர்
பாடத் தொடங்கினார். கூடியிருந்த மக்கள் அமைதியாயினர். ( கலவைத் தொடராக மாற்றுக.)
கூத்துக் கலைஞர் பாடத் தொடங்க்கினதும் கூடியிருந்த மக்க்ள்
அமைதியாயினர்.
5. ஓடிக்கொண்டிருந்த
மின்விசிறி சட்டென நின்றவுடன், அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைபட்டது. ( தனிச் சொற்றொடர்களாக
மாற்றுக )
ஓடிக் கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றது. அறையில்
உள்ளவர்கள் பேச்சு தடைபட்டது
பிறமொழிச் சொற்களைத்
தமிழ்ச்சொற்களாக மாற்றி எழுதுக
·
கோல்டு பிஸ்கட் - தங்கக்கட்டி
·
யூஸ்
பண்ணி - பயன்படுத்தி
·
வெயிட் - எடை
·
ஈக்வலாக - சமமாக
·
பட் - ஆனால்
·
எக்ஸ்பெரிமெண்ட்டை - சோதனையை
·
ரிப்பீட் - மீண்டும்
·
ஆன்சரை - விடையை
·
ஆல்
தி பெஸ்ட் - நல்வாழ்த்துகள்
மனிதனுக்கும் மலருக்குமான மணம் வீசும் இந்த நயவுரையைத்
தொடர்க.
வண்டுகளை ஈர்க்கும் வாசனையில்
பூக்களிடம் வசப்படுவது மனிதர்களே!
பூச்சியைக் கவரும் வண்ணங்களில்
பூக்களிடம் விழுவது மனிதர்களே!
கண்களைக் கவரும் உருவங்களில்
பூக்களிடம் விழுவது மனிதர்களே!
தொடரில் விடுபட்ட
வண்ணங்களிய உங்களின் எண்ணங்களால் நிரப்புக. :
1. வானம் கருக்கத் தொடங்கியது. மழைவரும் போலிருக்கிறது.
2. அனைவரின் பாராட்டுகளால், வெட்கத்தில் பாடகரின் முகம்
சிவந்தது.
3. வெள்ளை மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.
4. கண்ணுக்குக் குளுமையாக இருக்கும் பச்சைப் புல்வெளிகளில்
கதிரவனின் மஞ்சள் வெயில் பரவிக் கிடக்கிறது.
5. வெயிலில் அலையாதே; உடல் கருத்துவிடும்..
பொருத்தமானவற்றைச் சொற்பெட்டியில் கண்டு எழுதுக.
தங்கும், மரம் வீடு, அவிழும், தயங்கும், மரவீடு, தோற்பாவை,
விருது, தோற்பவை, கவிழும், விருந்து |
1. விரட்டாதீர்கள் – பறவைக்கு மரம் வீடு
வெட்டாதீர்கள் மனிதர்க்கும்
அவை தரும் மரவீடு.
2. காலை ஒளியினில் மலரிதழ் அவிழும்.
சோலைப் பூவினில் வன்டினம் கவிழும்.
3. மலை முகட்டினில் மேகம் தங்கும்.
–அதைப்
பார்க்கும் மனங்கள் செல்லத் தயங்கும்.
4.வாழ்க்கையில் தோற்பவை மீண்டும் வெல்லும் – இதைத்
தத்துவமாய்த் தோற்பாவைக் கூத்து சொல்லும்.
5. தெருக்கூத்தில் நடிகருக்குக் கைத்தட்டலே
விருது. அதில்
வரும்காசு குறைந்தாலும் அதுவேயவர் விருந்து.
அகராதியில் காண்க .
தால் - நாக்கு
உழுவை - புலி
அகவுதல் - ஆடல், அழைத்தல்
ஏந்தெழில் - மிக அழகு
அணிமை - அருகே
விடை எழுதுக :
1 |
பிறந்த நாள் விழாக்களில் மயிலாட்டம் முதலான கலைகளை நிகழ்த்த
முனைவேன். |
2 |
எங்கள் குடும்ப விழாக்களில் பொம்மலாட்டம் நிகழ்த்த ஏற்பாடு
செய்வேன். |
3 |
ஊர் விழாக்களில் கரகாட்டம், ஒயிலாட்டம் நடத்த முனைவேன். |
4 |
ஏதேனும் ஒரு கலையை முறைப்படி கற்றுக்கொள்வேன். |
5 |
நண்பர்களுக்கு இக்கலைகளில் பெருமையைக் கூறி அவர்களையும்
கற்றுக்கொள்ளச் செய்வேன். |
6 |
இவைகளை நடத்தும் கலைஞர்களுக்கு என்னால் ஆன உதவிகளைச்
செய்தேன். |
கலைச்சொல் அறிவோம் :
1. Aesthetics - அழகியல்,
முருகியல்
2. Artifacts - கலைப்
படைப்புகள்
3. Terminology - கலைச்சொல்
4. Myth - தொன்மம்