பத்தாம் வகுப்பு
மொழிப்பயிற்சி - இயல் 7
பத்தாம் வகுப்பு - தமிழ்
பத்தாம்
வகுப்பு
மொழிப்பயிற்சி
– இயல் 7
Among the five geographical divisions of
the Tamil country in Sangam Literature, the Marutam region was fit for
cultivation, as it had the most fertile lands. The property of a farmer
depended on getting the necessary sunlight, seasonal rains and the fertility of
the soil. Among these elements of nature, sunlight was considerd indispensable
by the ancient Tamils.
சங்க இலக்கியங்கள் காட்டும் தமிழர்களின் ஐவகை
நிலங்களுள், வளமிக்க நிலங்கள் நிறைந்த மருத நிலமே வேளாண்மைக்கு உகந்ததாக இருந்தது.
ஒரு உழவரின் செல்வம் என்பது போதுமான சூரிய ஒளி, பருவமழைகள், மண்ணின் வளம் ஆகியவற்றைச்
சார்ந்தது. இவற்றுள் சூரிய ஒளியானது, இன்றியமையாததாகத் தமிழர்களால் கருதப்பட்டது
பின்வரும்
தொடர்களைக் கொண்டு பொருத்தமான தொடர் அமைக்க.
(
வரப்போகிறேன், இல்லாமல் இருக்கிறது, கொஞ்சம் அதிகம், முன்னுக்குப் பின், மறக்க நினைக்கிறேன்
)
·
இன்னும்
சிறிது நேரத்தில் வரப்போகிறேன்.
·
வீட்டில்
மின்சாரம் இல்லாமல் இருக்கிறது.
·
விலை
கொஞ்சம் அதிகம்.
·
முன்னுக்குப்
பின் முரணாகப் பேசுகிறார்.
·
வேதனைகளை
மறக்க நினைக்கிறேன்.
தொகைச்
சொற்களைப் பிரித்து எழுதி, தமிழ் எண்ணுரு தருக.
மூவேந்தர்களால் நாற்றிசையும்
போற்றி வளர்க்கப்பட்ட முத்தமிழே, உலக மொழிகளில் உயர்ந்ததென்ற செம்மாந்த கூற்றிற்கு,
தமிழ் இலக்கியங்களில் அமைந்துள்ள இருதிணை அமைப்பே காரணமாகும். முப்பாலை முழுமையாகத்
தந்த தமிழின் சிறப்பினை ஐந்திணைகளில் அழகுற விளக்குபவை சங்க இலக்கியங்கள். நானிலத்தில்
பசித்தவர்க்கு அறுசுவை உணவுபோல் பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் படிப்பவர்க்கு மனதிற்கினிமை
ஈந்து தமிழ்ப்பெருமை சாற்றுகிறது.
தொகைச்சொற்கள்
:
· மூவேந்தர் -
மூன்று
+ வேந்தர் - ௩
· நாற்றிசையும் - நான்கு
+ திசை - ௪
· முத்தமிழ் - மூன்று + தமிழ் - ௩
· இருதிணை -
இரன்டு + திணை - உ
· முப்பால் - மூன்று + பால் -
௩
· ஐந்திணை - ஐந்து + திணை -
ரு
· நானிலம் - நான்கு + நிலம் - ௪
· அறுசுவை -
ஆறு + சுவை - ௬
· பத்துப்பாட்டு - பத்து + பாட்டு -
க0
· எட்டூத்தொகை - எட்டு + தொகை - அ
மகள் : என் காது வெறுமையாக இருப்பது பிடிக்கவில்லை. எனக்கு
தோடு ஒன்று
வாங்கிக்கொடு.
தாய் : நான் சொல்வதியக் கேள்.
காதுக்குத் தோடு அழகன்று. சான்றோர்
அறிவுரைகளைக்
கேட்டு நடப்பதே செவிக்கு அழகாகும்.. அதை அணிவாய்.
மகள் : என்னைப் பக்கியென்று பள்ளியில் சொல்லாதபடி,
என் கைகளுக்கு
இரண்டிரண்டு வளையல்கள் வாங்கிக்கொடு.
தாய் : . வராமல் வந்த விருந்தினருக்கு மனம் மகிழ விருந்திடுவதுதான் கைக்கு
வளையல். அவர் உன்னைப் பாராட்டுவதுதான் உன் கைக்குப்
பொன்வளையல். இதை அறிவாய் என் அமுதே!
மகள்
: அணிகலங்கள் இல்லாமல் தெருவில் போனால்
யார் என்னை மதிப்பார்?
இதைச் சொன்னதற்கு என்மேல் கோபமா?
சொன்னால் மாற்றிக் கொள்வேன்.
தாய்
: கல்வி கற்பதுதான்
பெண்களுக்கு ஆபரணம். கல் வைத்த நகைகள் உடலுக்கு
வேதனைதான்.
கற்ற பெண்களை அன்போடு இந்த நாடு கண்களில்
ஒற்றிக்கொள்ளும்.
ஊர்ப்பெயர்களின்
மரூஉவை எழுதுக.
·
புதுக்கோட்டை -
புதுகை
·
திருச்சிராப்பள்ளி -
திருச்சி
·
உதகமண்டலம் -
உதகை
·
கோயம்புத்தூர் - கோவை
·
நாகப்பட்டினம் - நாகை
·
புதுச்சேரி - புதுவை
·
கும்பகோணம் - கும்பை
·
திருநெல்வேலி - நெல்லை
·
மன்னார்குடி - மன்னை
·
மயிலாப்பூர், -
மயிலை
·
சைதாப்பேட்டை
- சைதை
படம்
தரும் செய்தியைப் பத்தியாக எழுதுக.
தமிழர்கள்
தங்கள் படைகளை, காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை என நாங்கு வகைகளாகப்
பிரித்தனர். மேற்கண்ட ஓவியம் திருநெல்வேலி மாவட்டம் திருப்புடை மருதூரில் வரையப்பட்டுள்ளது.
இதன் காலம் 17 ஆம் நூற்றாண்டு ஆகும். இந்த ஓவியம் தமிழரின் போர்த்திறனை விளக்குவதாக
அமைந்துள்ளது.
அகராதியில்
காண்க.
1.
மிரியல் - மிளகு
2.
வருத்தனை - சம்பளம்
3.
அதசி - சணல்
4.
துரிஞ்சில் - வௌவால்