10TH - TAMIL - மொழிப்பயிற்சி - இயல் 4 - PDF

                                                                  பத்தாம் வகுப்பு

மொழிப்பயிற்சி - இயல் 4



        பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக இதுவரை பல்வேறு பகுதிகளாகப் பயிற்சித்தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. மேலும் அலகுத் தேர்வுகள் நடத்தப்பட்டால் மாணவர்கள் பாடங்களைக் கற்பது எளிதாகவும் இருக்கும், பாடப்பகுதிகளைச் சிறுசிறு பகுதிகளாகப் பிரித்துப் பயிற்சி அளிக்க வசதியாகவும் இருக்கும். இதைக் கருத்திற்கொண்டு மொழிப்பயிற்சிப் பகுதிக்கான வினாத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்படவிருக்கின்றன. இயல் 4- ல் உள்ள மொழிப்பயிற்சி கீழே கொடுக்கப் பட்டுள்ளது. PDF வடிவத்தில் கொடுத்தால் பதிவிறக்கம் செய்வதும் படியெடுப்பதும் எளிது என்பதால் PDF வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மிகுந்த பணிச்சுமைகளுக்கிடையே தயாரிக்கப் பட்டுள்ளதால் பதிவிறக்கம் செய்த வினாத்தாளை நண்பர்களுக்கு அனுப்பாமல் இந்த இணைப்பை  ( LINK ) அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன். 
நன்றி, வணக்கம்!

பத்தாம் வகுப்பு - தமிழ்

குறைக்கப்பட்ட பாடப்பகுதி

பத்தாம் வகுப்பு


மொழிப்பயிற்சி – இயல் 4

வல்லின ஒற்றை இட்டும் நீக்கியும் எழுதுக

காகத்திற்கு காது உண்டா? அதற்கு காது கேட்குமா?

எல்லா பறவைகளுக்கும் காது உண்டு. செவிதுளைகள் இறகுகளால் மூடி இருக்கும். மற்றபடி பாலூட்டிகளில் உள்ளதுபோல புறசெவி மடல் இருக்காது. காகத்திற்கு காது உண்டு. காதுக் கேட்கும். பறவைகளுக்கு பார்த்தல், கேட்டல் உணர்வு நன்றாக வளர்ச்சிப் பெற்று இருக்கும். சுவைத்தல்  உணர்வுக் குறைவாகவும் நுகர்தல் உணர்வு இல்லையென்றேக் கூறலாம்.

காகத்திற்குக் காது உண்டா? அதற்குக் காது கேட்குமா?

எல்லாப் பறவைகளுக்கும் காது உண்டு. செவித்துளைகள் இறகுகளால் மூடி இருக்கும். மற்றபடி பாலூட்டிகளில் உள்ளதுபோல புறச்செவி மடல் இருக்காது. காகத்திற்குக் காது உண்டு. காது  கேட்கும். பறவைகளுக்குப் பார்த்தல், கேட்டல் உணர்வு நன்றாக வளர்ச்சி பெற்று இருக்கும். சுவைத்தல்  உணர்வு  குறைவாகவும் நுகர்தல் உணர்வு இல்லையென்றே கூறலாம்.

கொடுக்கப்பட்டுள்ள இருசொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க.

இயற்கை-செயற்கை   = செயற்கையால் இயற்கையை அழிக்காதே!

கொடு – கோடு                = கோட்டைத் தொட்டவர்களுக்குப் பரிசு கொடு.

கொள்-கோள்                   = கோள்களின் பெயர்களை மனத்தில் கொள்.

சிறு – சீறு                           = சிறு பிரச்சனைக்கே சீறுகிறான்.

தான் – தாம்                       =  தாம்தான் செய்ததாகச் சொன்னார்.

விதி – வீதி                        = விதி வசத்தால் வீதிக்கு வந்தான்

தொடரைப் படித்து விடையைக் கண்டறிக.

1. நூலின் பயன் படித்தல் எனில், கல்வியின் பயன் கற்றல்

2. விதைக்குத் தேவை எரு எனில், கதைக்குத் தேவை கரு.

3. கல் சிலை ஆகுமெனில், நெல் சோறு ஆகும்.

4. குரலில் இருந்து பேச்சு எனில், விரலில் இருந்து எழுத்து

5.  மீன் இருப்பது நீரில்; தேன் இருப்பது பூவில்.



மலர் : தேவி, அறையைவிட்டு வெளியே செல்லும்போது மின்விளக்கை

               அணைத்துவிட்டுச் செல்.

தேவி : ஆம். நாம் மின்சாரத்தைச் சேமிக்க வேண்டும்.

மலர் : நம் நாடு இரவில் தெருக்களுக்கு வெளிச்சம் தர அதிகமான

              மின்சாரத்தைச் செலவிடுகிறது.

தேவி : யாருக்குத் தெரியும்? நம் நாடு வருங்காலங்களில் நம் இரவு

                 வானத்தை ஒளியூட்ட செயற்கை நிலாவைக் கூட உருவாக்கலாம்.

மலர் : ஒரு சில நாடுகள் இத்தகைய ஒளிரும் செயற்கைக்கோள்களை

               அனுப்பப்போவதாக நான் படித்துள்ளேன்.

தேவி : அருமையான செய்தி! அவ்வறு செயற்கை நிலாக்களை   

                 நிறுவினால் பேரிடர் காலங்களில் மின்சாரம் இல்லாத

                இடங்களுக்கு ஒளியேற்படுத்த உதவும்

குறிப்பைப் பயன்படுத்தி விடை தருக.

குறிப்பு : எதிர்மறையான சொற்கள்

மீளாத் துயர்

மீண்ட இன்பம்

கொடுத்துச் சிவந்த

எடுத்துக் கருத்த

மறைத்துக் காட்டு

காட்டி மறை

அருகில் அமர்க

தொலைவில் நில்

பெரியவரின் அமைதி

சிறியவரின் ஆரவாரம்

புயலுக்குப் பின்

தென்றலுக்கு முன்



வினா –விடை :

            1.        பத்தியில் உள்ள அடுக்குத்தொடர்களை எடுத்து எழுதுக.

                மீண்டும் மீண்டும்

            2.      புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?

              தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது.

            3.      பெய்த மழை – இத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.

 பெய்மழை.

            4.      இப்பத்தி உணர்த்தும் அறிவியல் கொள்கை யாது?

பெருவெடிப்புக் கொள்கை.

            5.      உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாக நீவிர் கருதுவன யாவை?

               நீர், காற்று, உணவு ஆகியவை.

நயம் பாராட்டுக.

                    நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்

                                        நேர்ப்பட வைத்தாங்கே

                    குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு

                                        கோல வெறிபடைத்தோம்;

                    உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும்

                                        ஓட்டி மகிழ்ந்திடுவோம்;

                    பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு

                                        பாடுவதும் வியப்போ?   - பாரதியார்.

மோனை நயம் :

                    குலாவும் – குழம்பை – குடித்தொரு

       ண்டியில் – ண்டு

எதுகை நயம் :

                    நிலாவையும் – குலாவும்  -  உலாவும்  -  பலாவின்

அணிநயம் :

                    கனிச்சுளை வண்டியில் – உருவக அணி வந்துள்ளது.

கலைச்சொல் அறிவோம் :

        1.      Nanotechnology            -  மீநுண் தொழில்நுட்பம்                     

        2.      Biotechnology               -  உயிரித் தொழில்நுட்பம்

        3.      Ultaviolet rays               -  புற ஊதாக் கதிர்கள்

        4.      Space Technology         -  விண்வெளித் தொழில்நுட்பம்

        5.      Cosmic rays                   -  விண்வெளிக் கதிர்கள்

        6.      Infrared Rays                  -  அகச்சிவப்புக் கதிர்கள்

அகராதியில் காண்க

        1.      அவிர்தல்              -  ஒளிர்தல்

        2.      அழல்                     -  தீ

        3.      உவா                      -  நிலவு

        4.      கங்குல்                  -  இரவு

        5.      கனலி                    -  சூரியன்

                    


1 Comments

Previous Post Next Post